ஈரோடு, ஜன.27- தில்லியில் நடைபெற உள்ள குடி யரசு தின விழா அணிவகுப்பில் தமி ழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தியை புறக் கணித்த ஒன்றிய பாஜக அரசைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் ஈடுபட்டனர். தில்லியில் நடைபெற உள்ள இந் திய குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர் கள் வ.உ.சிதம்பரனார், பாரதியார், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் பங்களிப்பை விளக்கும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநி லங்களின் அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்நடவ டிக்கையை கண்டித்து ஈரோடு மாவட் டம், பெருந்துறையை அடுத்த காஞ்சிக் கோவில் பகுதியில் நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முத்து பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, சி.பரமசிவம், மாவட்டக் குழு உறுப்பினர் நவீன்குமார், தாலுகா குழு உறுப்பினர் விஸ்வநாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதேபோல் மூலப்பாளையம் பெட் ரோல் பங்க் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ராஜா, பா.லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
சத்தியமங்கலம் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகரச் செயலாளர் பி.வாசு தேவன் தலைமை வகித்தார். இதில், தாலுகா செயலாளர் கே.எம்.விஜய குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ. சகாதேவன், சிஐடியு மாவட்ட பொரு ளாளர் கே.மாரப்பன், அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க தலைவர் தேவ ராஜ் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பவானியில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெக நாதன், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் ப.மாரிமுத்து, டி.சுப்பி ரமணி, ஏ.பி.ராஜு, பி.என்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் சுதந்திர போராட்ட தியா கிகளின் முகமூடி அணிந்து கலந்து கொண்டனர்.
கோவை
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் அருகே குடியரசு தின விழா உறுதிமொழி யேற்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேக ரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, சி.பத்மநாபன், பாஸ்க ரன் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் வீர மங்கை வேலுநாச்சியார், மருது சகோ தரர்கள், வ.உ.சி, பாரதி உருவம் பொறித்த படங்களுக்கு மாலை அணி வித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். புலியகுளம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் கழக மாநகர தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கட்சி யின் த.நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.அறிவொளி ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற உறுதி மொழி நிகழ்ச்சிக்கு அரசு போக்கு வரத்து ஊழியர் (சிஐடியு) சங்க கோவை மண்டல தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் மூ.அன்பரசன், கே. மகாலிங்கம், கே.ரவி, அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க செயலாளர் வேளாங்கண்ணிராஜ், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் ஜி.பழனிச்சாமி, விதொச தாலுகா தலைவர் ஸ்டாலின் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர். மேவை.சண்முகராஜா, மாநிலக்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேக ரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். சேதுமாதவன், வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவின்குமார், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வெங்க டேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந் தரி, சிபிஎம் மேற்கு செயலாளர் எம்.கன கராஜ், வாலிபர் சங்க மாவட்ட பொரு ளாளர் வி.ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சேலம் தாலுகா மேக்னசைட் அலுவலகம் முன்பு நடை பெற்ற நிகழ்ச்சியில் தாலுகா செயலா ளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.பரமேஷ்வரி, தாலுகா குழு உறுப்பினர் ஏ.சுந்தரம் ஆகியோ ரும், சேலம் மாநகர கிழக்கு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மாந கர செயலாளர் பொன்.ரமணி, மாநகரக் குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நங்கவள்ளி ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் கார்க்கி, ஒன்றிய செயலாளர் ஜி. கவிதா, மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் கே.ராஜாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேட்டூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட பொருளாளர் வீ.இளங்கோ, பால் மார்கெட் பகுதியில் சுமைப்பணி தொழி லாளர் சங்க மாநில பொதுச்செயலா ளர் ஆர்.வெங்கடபதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.கோவிந்தன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அஸ்தம்பட்டி பகுதியில் சிஐடியு மாவட்ட நிர்வாகி விஜயலட்சுமி தலை மையிலும், வாழப்பாடியில் தாலுகா செயலாளர் வீ.தங்கவேல் தலைமையி லும், கருமலைக்கூடல் பகுதியில் கொளத்தூர் தாலுகா செயலாளர் எஸ். வசந்தி தலைமையிலும், சேலம் உருக் காலையில் சங்கத்தின் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையிலும், ஐஸ் வர்யம் அவென்யூவில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசவுந்தரி தலைமையிலும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் அ.கந் தன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். ஆத்தூரில் சிபிஎம் தாலுகா செய லாளர் எம்.முருகேசன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில், மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாநில உதவி செயலாளர் ஏ.வி.சண்முகம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பொன்னுசாமி, மலைக்குறவன் பழங் குடியினர் சங்க மாவட்ட செயலாளர் டி.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.