அவிநாசி, ஜூன்.6- தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் திருச்சியை நோக்கி நடைப் பயணம் திங்களன்று அவிநாசி வந்தடைந் தது. சத்துணவு ஊழியர்கள் ஊதிய தொகுப் பில் தொடங்கி, சிறப்பு காலமுறை ஊதியம் என பெயர் மாற்றினாலும் குறைந்தபட்ச கல்வி முதல் கல்லூரி வரை பயின்ற சத்துணவு ஊழியர்களுக்கு 38 ஆண்டுக ளுக்குப் பின்னும் கூட குறைந்தபட்ச ஊதி யம் கிடைக்காத நிலை தொடர்கிறது, அரசுத் துறை சத்துணவுத் திட்டத்தில் 30 ஆண்டுக ளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்குச் சிறப்பு ஓய்வூதியம் மாதம் தோறும் 2000 வழங்கு கின்றது, இதை வைத்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது,
அரசுத்துறையில் ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் ஒட்டு மொத்த தொகை வழங்குவ தைப் போல சத்துணவு ஊழியர்களுக்கு கணக்கிட்டு வழங்காமல் அமைப்பாளர் களுக்கு ஒரு லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 50 ஆயிரம் வழங்குவது பயனளிக்காது என்றும்.தமிழக அரசிடம் தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றக்கோரியும் மற்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காலிப்பணியி டங்களை நிரப்ப கோரி, ஜூன் 4 முதல் 10 தேதி வரை ராமேஸ்வரம், மயிலாடுதுறை, கும் முடிப்பூண்டி, கோவை, திருப்பத்தூர், கன் னியாகுமரி, ஓசூர் உள்ளிட்ட 7 இடங்க ளில் இருந்து 2100 கிலோ மீட்டர் நடைபய ணத்தை துவக்கியுள்ளனர்.இதன் ஒரு பகுதி யாக கோவையின் பயணக் குழு அவிநாசி வந்தடைந்த இப் பயணக் குழு தாலுகா அலுவலகம் தொடங்கி பிரச்சார முழக்கங் களை முன்வைத்து நடைப்பயணமாக சேவூர் சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது, கோரிக்கைகளை விளக்கி அமைப்பின் மாநில செயலாளர் ஜெ. நிர்மலா உரை யாற்றினார். மாவட்டத் தலைவர் விஜயலட் சுமி, மாவட்ட செயலாளர் முருகேசன், பய ணம் வெற்றி பெற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ராமன், வட்ட கிளை செயலாளர் கருப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர் மேலும் பயணக் குழுவில் பல்ல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.