உடுமலை, மே 9- மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங் கன்வாடி ஊழியர்களை சேர்க்க வலியு றுத்தி திங்களன்று உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத் தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சத்துணவு அமைப்பின் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், அனைத்து ஓய்வூதியர் களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9850 வழங்க வேண்டும். மருத் துவ காப்பீடு திட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழி யர்களை சேர்க்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுகால பணப லன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத் தின் உடுமலைப்பேட்டை முன்னாள் செயலாளர்கள் தாசன், சுரேஷ்குமார், ராமநாதன், குணசேகரன் மற்றும் குடி மங்கலம் பொறுப்பாளர்கள் அம்ச வேணி, சிவபாக்கியம், செயபால் ராஜ், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எல்லம்மாள் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார் கள்.