சத்தியமங்கலம், டிச.19- நீதிக்கு புறம்பாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமி யர்களை விடுதலை செய்ய வலியு றுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு வலியுறுத்தி உள் ளது. நீதிக்கு புறம்பாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமி யர்களை விடுதலை செய்ய வலியு றுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு சார்பில் சத்தியமங்க லத்தில் சிறப்பு மாநாடு நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவி தலைவர் ப.மாரி முத்து தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. ஹாத்திம்தாய் வரவேற்புறையாற் றினார். வட்டார ஜமா அத்துல் உலமா சபை கே.மொகமது கெளஸ் ரஷாதி முன்னிலை வகித் தார். இம்மாநாட்டில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய் யப்பட்டு தண்டனை காலத்திற்கு பின்பும், முஸ்லீம்கள் பல ஆண்டு களாக சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். அதேபோல குற்ற விசா ரணையில் குற்றம் நிரூபிக்கப்ப டாமல் அல்லது விசாரணையின்றி பல ஆண்டுகளாக முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். சொல்லொண் ணாத் துயரங்களை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென பாதிக்கப் பட்ட குடும்பத்தை சார்ந்தோர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத் துள்ளனர். எனவே, நீதிக்கு புறம் பாக சிறையில் வைக்கப்பட்டிருக் கும் முஸ்லீம் மற்றும் இதர சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, இம்மாநாட்டில் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி பேராசிரியர் அ. மார்க்ஸ் மற்றும் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் பேசி னர். நிறைவாக மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜூ நன்றி கூறி னார்.