districts

img

தீக்கதிர் வளர்ச்சி நிதி வழங்கல்

சேலம், ஜன.21- தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) துணைப் பொதுச்செயலாளர் என்.முருகே சன், பி.சுந்தரம், சக்திவேல் ஆகிய மூவரும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் தராததால் சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்தனர். செலவுத்தொகையையும், மேலும் மன உளைச் சல் சேவை குறைபாடு காரணத்திற்காக ரூ.30 ஆயிரம் அபரா தம் வழங்க சொல்லி நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத் திற்கு உத்தரவிட்டது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வந்தது.  இதையடுத்து ஊழியர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த  நிலையில், இன்சூரன்ஸ் நிறுவனம் அந்த தொகையை வழங்கி யது. இதில், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.2 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் கிழக்கு மாநகரச்  செயலாளர் பொன்.ரமணியிடம் வழங்கினர்.