அவிநாசி, ஜூலை 1- 70 வயது நிறைவடைந்த ஓய்வூதி யர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங் கத்தின் 5 ஆவது வட்டக் கிளை பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவிநாசி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் சனியன்று வட்டக்கிளை தலைவர் எஸ்.கோபாலகி ருஷ்ணன் தலைமையில் 5 ஆவது வட்டக் கிளை பேரவை கூட்டம் நடை பெற்றது. இதில், சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர் கள், வன பாதுகாப்பு அலுவலர்கள், ஊர் புற நூலகர்கள் என அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7 ஆயி ரத்து 850 வழங்க வேண்டும். புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய் வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத் துவ காப்பீட்டு திட்டத்தில் அனைத்து ஓய் வூதியர்களையும் இணைத்து மருத் துவ சிகிச்சைகளுக்கான செலவுத் தொகையை வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் மாவட்டத் தலைவர் ஜி. சண்முகம்,மாவட்டத் துணைத் தலை வர் ஜெ. நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாபு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.