districts

img

பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு

சேலம், செப்.27- பெண்கள் முன்னேற்றத்தில் அக் கறை கொண்ட அரசு தற்போது தமிழ் நாட்டில் உள்ளதென சேலத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்தார். சேலம் மாவட்டம், அழகாபுரம் மத்திய கூட்டுறவு சமுதாய கூடத்தில்  மகளிருக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்ட வங்கிப்பற்று அட்டை களை, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதனன்று வழங்கி னார். அப்போது அவர் பேசுகையில், சென்னைக்கு அடுத்து சேலத்தில் தான் அதிகமான மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்தியா  முழுவதும் இத்திட்டம் அனைவராலும்  பாராட்டப்பட்டு வருகிறது. வீட்டிலி ருக்கும் பெண்கள் இனிமேல் மகளிர் உரிமைத்திட்ட பயனாளி என்று பெருமையோடு கூறும் அளவிற்கு திட்டம் செயல்பட்டு வருகிறது. இத் திட்டம் பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றம் திட்டமாக உள்ளது. பெரியாரின் பெண்ணுரிமை இங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது. பெண் முன் னேற்றம் கொண்ட அரசாக தற்போது உள்ளது. பெண்கள் சுதந்திரமாக வாழ இந்த திட்டத்தில் கிடைக்கும் உரிமைத் தொகை பயன்படும், என்றார். மற்ற அடிமைத்தனத்தை விட ஆண் - பெண் என்ற அடிமைத்தனம் மிகப்பெரியதாக உள்ளதாக பெரியார்  கூறியிருந்தார். பெண்கள் வீட்டு வேலை கள் மட்டும் தான் செய்ய வேண்டிய  நிலை இருந்தது.

பெண்களுக்கு சொத் துரிமையில் பங்கு என்ற சட்டத்தை கலைஞர் அரசு செயல்படுத்தியது. பெண்கள் சிறுமியாக இருக்கும் போது  தந்தையையும், பெண்ணாக மாறும்  போது கணவனையும், முதியவராக மாறும்போது தனது பிள்ளைகளையும் எதிர்பார்க்க வேண்டிய நிலை இருந்தது. தமிழக அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து. பெண்கள் படிப்பிற்காக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கட்டணமில்லா பேருந்து வசதி  திட்டம் மற்றும் முதல்வரின் காலை  சிற்றுண்டி உணவுத்திட்டம் ஆகியவை  மிகக்முக்கிய திட்டமாக உள்ளது. கலை ஞர் அரசிற்கு மகுடம் சூட்டிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றார். மேலும், பெண்கள் அனைரும், கல்வி மற்றும் பொருளாதாரம், பொது வாழ்க்கையில் உயர வேண்டும். அப் போதுதான் மக்களுக்கான உரிமையை  நிலை நாட்ட முடியும். உள்ளாட்சி பதவி களில் 50 சதவிகித பேர் பெண்கள் வந்துள்ளனர். மேயர், நகராட்சி தலை வர், ஊராட்சி மன்ற தலைவர் என அனைத்து பொறுப்பிலும் பெண்கள் வந்துள்ளனர். மகளிர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தைகளும் பகுத்தறி வுடன் செயல்படுவார்கள், என்றார்.  இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட  ஆட்சியர் எஸ்.கார்மேகம், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு  உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.