districts

img

விலங்குகள் சரணாலய விரிவாக்கத்தால் மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்

உடுமலை, ஜூன் 30-  வனவிலங்குகள் சரணாலய விரிவாக்கம் என்ற பெயரில், மேற்கு தொடர்ச்சி மலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என உடுமலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு வியாழனன்று உடுமலை வாணி மஹாலில்  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பங் கேற்று உரையாற்றினார். முன்ன தாக செய்தியாளர்களிடம் கூறுகை யில், தமிழ்நாட்டிலுள்ள மேற்கு  தொடர்ச்சி மலையில் விலங்குகள் சரணாலயம் விரிவாக்கம் செய்ய, மலையில் அடிவார பகுதியிலி ருந்து ஒரு கிலோ மீட்டர் தொலை வுக்கு விரிவாக்கம் செய்ய வேண் டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மலையடிவார பகுதியில் விரிவாக்கம் செய்த பகு தியில் விவசாயம் உள்ளிட்ட பொது மக்கள் எவ்வித வேலைகளும் செய்யக்கூடாது. இந்த தீர்ப்பால்  தமிழகத்தில் நீலகிரி, கோவை மற் றும் திருப்பூர் உள்ளிட்ட 10க்கும்  மேற்பட்ட மாவட்டத்தில் உள்ள  மலைவாழ் மக்கள் மற்றும் மலை யடிவார பகுதியில் வசிக்கும் மக் களை கடுமையான பாதிப்புக்குள் ளாவார்கள்.  இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய் யக்கோரி மேல்முறையீட்டு மனுவை  கேரள அரசு தாக்கல் செய்துள்ளது. கேரள அரசாங்கத்தை போல், தமி ழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண் டும் என கடந்த வாரம் தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.

பொது மக்களும், விவசாயிகளும் பாதிக் கும் வகையில் இருக்கும் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர் மனுவை தமி ழக அரசு காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். அதேபோல் இந்தாண்டு டெல்டா பாசன விவசாய தேவைக்கு முதன் முறையாக கடந்த மே 24 ஆம் தேதி யன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இத னால், அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்ய முடியும். இந்த நடவடிக் கையை வரவேற்கிறோம்.  அதே நேரத்தில், தமிழக அரசின் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாக ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்க ருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டம் கிடைக்கும் என்ற அறிவிப்பு  விவசாயிகளை ஏமாற்றமடைய செய் துள்ளது. கடந்த ஆண்டு ஒரு குடும் பத்திற்கு இரண்டு ஏக்கர் விவசாயம் செய்ய குறுவை தொகுப்பு திட்டம் இருந்த நிலையில், தற்பொழுது ஒரு குடும்பத்திற்கு ஒரு ஹெக்டெர் நிலத்திற்கு குறுவை தொகுப்பு  சிறப்பு திட்டத்தை விவசாயிக ளுக்கு வழங்க வேண்டும். அதேபோல், குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து பகுதிகளி லும் முழுமையாக அமல்படுத்தப் பட உள்ள நிலையில், கடுமையான உரத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் உர விற்பனையாளர்கள் உரங்களை பதுக்கி வைத்து விவசாயிகளிடம்  மாற்று பொருட்கள் வாங்கினால் தான் உரம் தருகிறார்கள். அதுவும் பல மடங்கு விலையை உயர்த்தி தரும் தனியார் உர கடைகளின் உரி மத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சி யர்களுக்கு உத்தரவு இட வேண் டும். மேலும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங் களை இறக்குமதி செய்து வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு பெ.சண்முகம் கூறினார்.