districts

img

அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கு விச - மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.7- நூற்றாண்டுகால அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின்  சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு  பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், பிக்சுனள்ளி உள் ளிட்ட 5 ஊராட்சிகளில்  நூ;றறாண்டு களாக விவசாயம் செய்து வரும்  விவசாயிகளின் அனுபவ நிலங் களுக்கு பட்டா வழங்கவேண்டும்.  வருவாய் துறையிடமிருந்து சாகு படி நிலங்களை வனத்துறைக்கு மாற்றிய உத்தரவை திரும்ப பெற வேண்டும். விவசாய நிலத்தில் உள்ள மா மரங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என விவசாயிகளை நிர்பந்திக்கும் வனத்துறையின் நட வடிக்கையை கண்டித்து பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்திரள் ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ஜி.நக்கீரன் தலைமை ஏற்றார். இதில், விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாநிலத்தலைவர் பி.டில்லி பாபு, விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், விச மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன், மலைவாழ் சங்க மாவட்டச் செய லாளர் கே.என்.மல்லையன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி. நாகராசன், விவசாயிகள் மாவட்டப்  பொருளாளர் சி.வஞ்சி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் டி.எஸ்.ராமச்சாந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

முன்னதாக, பி.டில்லிபாபு பேசு கையில், பல தலைமுறைகளாக வீடுகட்டி குடியிருந்து விவசாயம் செய்துவரும் விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மாங்காயை அறுவடையின் போது பாலக்கோடு ரேஞ்சர் நடராஜன் மிரட்டி பணம்  வசூல் செய்துவருகிறார். விவசாயி களிடம் அத்துமீறும் ரேஞ்சர் நட ராஜன் மீது தமிழக அரசு  நடவ டிக்கை எடுக்கவேண்டும். விவசாயி களிடமிருந்து ஒரு பிடி மண்ணைக்கூட வனத்துறை எடுக்க மலைவாழ் மக்கள் சங்கம் விடாது என்றார்.  ஆர்ப்பாட்டத்தில் டி.ரவீந்திரன் பேசுகையில், கரடு முரடாக இருந்த  இடத்தை தன் சொந்த குடும்ப உழைப்பில் சமன் செய்து விவ சாயம் செய்து வருகின்றனர். பல  தலைமுறைகளாக விவசாயம்  செய்துவரும் இம்மக்களுக்கு தெரி யாமல் வருவாய்த் துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றியுள் ளனர். விவசாயிகளுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்கவில்லை.இத்தனை ஆண்டுகாலம் கழித்து  தற்போது வனத்துறை விவசாயி கள் சாகுபடி செய்யும் இடத்தை வனத்துறைக்கு சொந்தம் என கூறி வருகிறது. விவசாயம் செய்து அறுவடை  செய்யும் பொழுது வனத்துறை யினர் விவசாயிகளிடம் மிரட்டி சுமார் ரூ.1 கோடி அளவுக்கு பணம்  வசூல் செய்துள்ளனர். இந்த பணத் திற்கு எந்த ரசீதும் கொடுக்க வில்லை. மாவட்ட வன அலுவல ருக்கு யார் இந்த அதிகாரத்தை  கொடுத்தது.எனவே வனத்துறை யினர். விவசாயிகளிடமிருந்து பணம் பறிப்பதை கைவிட வேண்டும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என் றார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு வினை தருமபுரி மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தியிடம், தலைவர்கள்  அளித் தனர். இதனை பெற்றுக்கொண்டு உரிய தலையீடு செய்து  நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.