districts

img

தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், ஜூலை 18- ‘தமிழ்நாடு நாள்’ தினத்தையொட்டி பல்வேறு மாவட் டங்களில் விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக் கண் காட்சி நடைபெற்றது. 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று, மெட்ராஸ்  மாகாணம் என்பதை தமிழ்நாடு என சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றினார் பேரறிஞர் அண்ணா. இதையடுத்து தமிழ் நாடு என பெயரிடப்பட்டன. ஆண்டுதோறும் ஜூலை 18  ஆம் தேதியன்று தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக  கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  இதன்ஒருபகுதியாக, நாமக்கல் நகராட்சி தெற்கு அரசினர்  மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி யினை மாவட்ட ஆட்சியர் ச.உமா,  தலைமையில் நடை பெற்றது. இதிலி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராம லிங்கம்,  மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, குளக்கரை  திடலில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைக் கப்பட்டது. முன்னதாக, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் நாடு நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடை பெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற  மாணவ- மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு  சான்றிதழ்கள், காசோலைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப் பட்டது.  இதேபோன்று கோவையிலும், புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், கோவை  மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கொண்டனர்.