கோவை, ஜூலை 18- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு திருநாள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்து, பார்வையிட்டார். ஜூலை 18 தமிழ்நாடு திருநாள் கொண்டாடப்படுகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு திருநாளை முன்னிட்டு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மதராஸ் மாகாணம் என பெயரிட்டிருந்த போது உள்ள வரைபடங்கள் மற்றும் வர லாற்று நிகழ்வுகள் மற்றும் சின்னங்கள், ஓவியங்களுடன் கூடிய பதாகைகள், மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது பற்றிய குறிப்புகள், ஜார்ஜ் கோட்டை பற்றிய குறிப்புகள் மற்றும் பல்வேறு நிலஅளவை காட்டும் வரைபடங்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியினை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியினை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வை யிட்டனர்.