ஒன்றிய அரசின் பணமதிப்பி ழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, மூலப்பொருட்களின் விலை யேற்றம் உள்ளிட்ட காரணங்க ளால் கோவை உள்ளிட்ட இந்தி யாவில் உள்ள சிறு,குறு, நடுத் தர தொழில்கூடங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகி றது. மோடி அரசின் கார்ப்ரேட் கொள்கையின் விளைவாக திணறும் தொழில்களை மீட்டிட வேண்டும் என தொடர்ந்து தொழிற்கூட்டமைப்பினர் போராடி வருகின்றனர். நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்த லில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெரும் என்கிற கருத்துக்க ணிப்புகள் வெளிவந்து கொண்டி ருக்கிற நிலையில், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறுகுறு தொழில்களை பாதுகாக்க பல் வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப் பதாவது, தமிழ்நாட்டின் வளர்ச் சிக்கு பல்வேறு நலத்திட்டங் களை கொண்டு வந்து மக்களின் நல்வாழ்வுக்கு அயராது உழைத்து வருகின்றீர்கள். இந்தி யாவில் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்க தங்கள் கடும் முயற்சிக்கு எங்களின் நன்றிகளை உறுத்தாக்கிக்கொள் கிறோம். தமிழ்நாட்டில் குறு சிறு தொழில்களின் வளர்ச்சி காண்ப தற்காக இயந்திர கொள்முதல் மானியமாக 25 சதவீதம் தந்து தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கு ஓராயிரம் நன்றிகளை தெரிவித் துக்கொள்கிறோம். அதேநேரத்தில், நமது மாநி லத்தில் குறு சிறு தொழில்கள் நிறைந்து உள்ள நிலையில் மின்கட்டண உயர்வால் உண்மை யாக தொழில்கள் பாதித்து வரு கிறது. தங்கள் கருணை உள்ளத் தோடு மின்கட்டணத்தில் நிலைக் கட்டணத்தை கிலோ வாட்டுக்கு 430 சதவீதம் உயர்த்திய கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற பணிவுடன் தங்களை கேட்டுக்கொள்கிறோம். பீக் ஹவர்க்கான கட்டணத்தை கைவி டுமாறு கேட்டுக்கொள்வதுடன் தனி மீட்டர் பொருத்துவதையும் தங்கள் ஆணை பிறப்பித்து நிறுத்த வேண்டுகிறோம்.
ஒன்றிய அரசின் மூலமாக நமது மாநிலத்தில் தொழில் வளர்ச்சி காண்பதற்காக நமது நாட்டில் ஜிஎஸ்டி அமுலாக்கத் திற்கு பிறகு ஜாப்ஆர்டர்கள் செய்கின்ற குறு சிறு தொழில் கள் உதிரிபாகங்கள் செய் கின்ற தொழில் முனைவோர் கள் தொடர்ந்து கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரு கிறோம். எங்கள் தொழில்களை பாதுகாப்பதற்கு குறு சிறு தொழில்களுக்கு மூலப்பொருள் கொள்முதலுக்கும், உற்பத்தி பொருள் விற்பனைக்கும், 18 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி யை 5 சதவீதமாக மாற்றி தர தங்க ளிடத்தில் கோரிக்கையாக முன் வைக்கிறோம். தங்களின் முயற்சி யால் ஜாப்ஆர்டர்கள் செய்கின்ற தொழில் முனைவோர்களுக்கு ஜிஎஸ்டி -யில் இருந்து விலக்கு அளித்து பழையபடி 2 சதம் டிடிஎஸ் பிடித்தம் செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். சர்ப்பாஸ் சட்ட நடவடிக்கை எடுப் பதற்கு 6 மாத காலமாக இருந் ததை 3 மாதமாக மாற்றியதால் நெருக்கடிகளுக்கு தொழில் முனைவோர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மீண்டும் 3 மாதங்க ளுக்கு பதிலாக 6 மாதங்களாக சர்ப்பாஸ் சட்டத்தை மாற்றிட வேண்டும். ஒன்றிய அரசு குறு சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக உதவுகின்ற வகையில் இயந்தி ரம் கொள்முதல் செய்கின்றவர்க ளுக்கு 15 சதவீதம் மானியம் வழங்கி வந்தன, குறு சிறு தொழில் வளர்ச்சிக்கு பெரும் உத வியாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி விட்டார்கள். குறு சிறு தொழில்களுக்கு உதவிடும் வகையில் நிறுத்தப்பட்ட 15 சதவீதம் மானியத்தை பெற்றுத் தர வேண்டும்.
மாநிலங்களிலும், மாவட்டங் களிலும், உள்ளுர்களிலும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருவது குறு சிறு தொழில்களே, குறு சிறு வளர்ச்சிக்கு உத வுகின்ற வகையில் தொழில்க ளில் முதலீடு செய்ய வங்கியில் பெறுகின்ற கடனுக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்தில் வழங்கிட ஆவண செய்ய வேண்டுகிறோம். அரசு பொதுத்துறை நிறு வனங்களிடமும், கார்ப்ரேட் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களி டமும் குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில் ஜாப்ஆர்டர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் 25 சதவீதம் கொள்மு தல் செய்வதை உறுதிபடுத்தி டதங்கள் ஆவண செய்ய வேண்டு கிறோம். கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேல்பட்ட வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் குறுந்தொழில்கள் நடத்தி வருகின்றவர்களுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசின் நிதியில் அடுக்குமாடி குறுந்தொ ழில் பேட்டைகளை அமைத்து தருவதற்கு தங்கள் ஆவண செய் யுமாய் கேட்டுக்கொள்கிறோம். குறு சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு என தனி அமைச் சரை நியமிக்க வேண்டும். தனி வாரியம் உருவாக்க வேண்டும். குறு சிறு தொழில்களுக்கு தனி நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும். கோவை வளர்ச்சி கண்ட மாவட்ட மாகவும் அனுதினம் வளர்ச்சி கண்டுவருகின்ற தொழில் நகரமா கும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொழில் நிமிரத்தமாக ஆயிரக்கணக்காண மக்கள் குடியேறும் நகரமாகும். நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்து வரு கிறது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கோவை நகரப் பகுதிக்குள் வந்து செல்ல சாலை வசதிகள் இல்லாததால் அனுதினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கோவையின் வளர்ச்சிக்கு தக்க வகையில் உள்கட்டமைப்பு களை மேம்படுத்த நகரத்துக்கு உள்ளும் நகரத்துக்கு வெளியே யும் மேம்பாலங்களை அமைப்ப தற்கான கட்டமைப்புக்கும், வட்ட சாலைகள் அமைத்திடும் பணிக் கும் தனிநிதி ஒதுக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.