திருப்பூர், நவ. 29- தையல் கலைஞர்களின் கடைக ளுக்கு தொழில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என உடுமலை நகராட்சி தலைவர் மத்தினிடம் தையல் கலைஞர் கள் மனு அளித்துள்ளனர். சிஐடியு தையல் கலைஞர்கள் சங் கம் சார்பில் உடுமலை நகராட்சி தலை வர் மத்தினிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, உடுமலையில் தையல் கடை நடத்தி வரும் தையல் கலைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கும், பல இன்னல்களுக்கும் இடையில் தொழிலை நடத்தி வருகிறோம். ரெடி மேடு ஆடைகளின் வருகையின் காரண மாக, எங்கள் தொழில் நலிந்து விட்டது. 300க்கும் மேற்பட்ட தையல் கலைஞர் கள் இருந்தநிலையில், தற்சமயம் 100க் கும் குறைவானவர்களே இத்தொழில் செய்து வருகின்றனர். மற்றவர்கள் கட்டி டத் தொழில், பெயிண்டிங், உணவ கங்கள், திருப்பூர் பனியன் கம்பெனிக ளுக்கு சென்றுவிட்டனர். குடும்ப வாழ் வாதாரத்துக்காக தினக்கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். வயது மூப்பு வேறு வேலை தெரியாத மற்றும் முடியாத காரணத்தினால் தையல் தொழில் செய்து வருகிறோம். இன் றைய சூழ்நிலையில் கடை வாடகை, வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் குடும்ப செலவிற்கு இத் தொழிலில் வருகின்ற வருமானம் போத வில்லை. இது போன்ற சூழ்நிலையில், தொழில் வரி விதிப்பது கூடுதலான சுமையை ஏற்படுத்துகிறது. எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொழில் வரி விலக்கு அளித்து உதவ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள் ளது. மனுவை பெற்று கொண்ட நகராட்சி தலைவர் உரிய முறையில் பரிசீலித்து கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் சிஐடியு திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத் தின் மாவட்ட நிர்வாகி ரத்தினசாமி, துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், தமிழ்நாடு தையல் கலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், ஷர்மிளா பானு, கண்ணப் பன் ஆகிய நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.