சிறைவாசிகள் தயாரித்த இனிப்புகள்
சேலம், நவ.11- சேலம் மத்திய சிறைவாசிகள் தயாரித்த இனிப்பு, கார வகைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரு கின்றன. சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகளின் பயன்பாட்டிற் காக பேக்கரி உற்பத்தி பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நி லையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக் களுக்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வரு கின்றன. விற்பனையை சேலம் மத்திய சிறைக் கண்காணிப் பாளா் (பொறுப்பு) ஜி.வினோத் தொடங்கி வைத்தார். விற்ப னையில் கிடைக்கும் லாப தொகையில் 20 சதவீதம் சிறைவா சிகளுக்கு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈரோட்டில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ஈரோடு, நவ.11- ஈரோடு மாநகா் பகுதியில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காரப்பாறை பகுதியில் நடந்த பணிகளை மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ண மூா்த்தி ஆய்வு செய்தார். அப்போது அவா் கூறுகையில், ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகள் மற்றும் வீட்டின் அருகில் உள்ள கலன்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் நிலை உருவாகி உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, ஈரோடு மாநகராட்சி முழுவதும் 300 கொசு ஒழிப்பு பணியா ளா்கள் மூலம் சிறப்பு நோய்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவர்கள் வீடுவீடாக சென்று கொசுக்கள் உற்பத்தியா கும் கலன்களை முழுவதுமாக அழிப்பதோடு, காய்ச்சல் யாருக்கேனும் இருக்கிறதா? என்பதை கண்டறிகின்ற னர். மேலும் 32 கைதெளிப்பான்கள், 3 பெரிய புகைதெளிப் பான்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் கண்டறியும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்களும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்பட்டு வருகி றது. காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவம னைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண் டும் என மாநகராட்சி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
சேலம், நவ. 11- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகி றது. கடந்த 4 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிகிழமையன்று காலை நிலவரப்படி அணைக்கு 8 ஆயிரத்து 424 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.15 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினா டிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளி யேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
கோவை – திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்
கோவை, நவ.11- தீபாவளியையொட்டி நவம்பா் 11 முதல் 14ஆம் தேதி வரை கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரவிக்கப் பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளியையொட்டி, நவம்பா் 11 முதல் 14ஆம் தேதி வரை கோவை ரயில் நிலை யத்தில் இருந்து காலை 9.20 மணிக்குப் புறப்படும் கோவை - திண்டுக்கல் சிறப்பு ரயில் (எண்: 06077) பொள்ளாச்சி, உடும லைப்பேட்டை, பழனி வழியாக பிற்பகல் 1 மணிக்கு திண்டுக் கல் ரயில் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கமாக, திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திண்டுக்கல் - கோவை சிறப்பு ரயில் (எண்: 06078) மாலை 5.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலானது, கோவை, போத்த னூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடும லைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள் ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் பல்வேறு இடங்களில் மண்சரிவு
நீலகிரி, நவ.11- நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குன்னூா், கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங் கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இத னால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, குன்னூா், கோத்தகிரியில் பெய்த கனமழையால் செம்மணாரை - கோழிக்கரை செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மேலும், கரிக்கையூா் சாலையில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப் பனை அருகே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. மேலும், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவயிடத்தில் ஆய்வு செய்த நெடுஞ் சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் தீபாவளி
கோபி, நவ. 11- மாற்றுத்திறனாளி மாணவர்களுடன், கோபிச்செட்டிபா ளையம் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள கூகலூர் அரசு தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக, கோபி பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயின்று வரும் மாற்று திறன் கொண்ட மாணவர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி வரு கின்றனர். இந்தாண்டும் மாற்றுத் திறன் மாணவர்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தீபாவளியை கொண்டா டினர். இதைத்தொடர்ந்து, கூகலூர் அரசு பள்ளி சார்பில் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடை கள் மற்றும் பட்டாசுகள் வழங்கி கொண்டாடினர்.
டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர்
சென்னை, நவ.11- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு தற்போது பரவி வருகிறது” என்றார். ஒன்றிய அரசு அறிவிப் பதற்கு முன்பு தமிழ்நாடு சுகா தாரத்துறை நடவடிக்கை தொடங்கிவிட்டது. புதுக் கோட்டை பல் மருத்துவக் கல்லூரியை வருகிற 15 ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்றும் அவர் கூறினார்.
கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்கள் பறிமுதல்
கோவை, நவ.11- சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமா னத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்பு, ஆமைகள், சிலந்தி உள்ளிட்ட வெளிநாட்டு உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 6ஆம் தேதி அதிகாலையில் சிங்கப் பூரிலிருந்து கோவைக்கு வந்த விமான பயணி களின் உடைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பயணிகளை சோ தனை செய்யும் இடம் அருகே சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் மூன்று பெட்டி கள் கிடந்தது. இதனை யாரும் உரிமை கோரா ததால், சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதி காரிகள் பெட்டிகளை சோதனை செய்தனர். சோத னையில், பெட்டிக்களுக்குள் அரிய வகை வெளி நாட்டு உயிரினங்களான பாம்பு, ஆமை, சிலந்தி, ஓணாண் உள்ளிட்ட உயிரி னங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் பெட்டிகளை வைத்தது யார் என் விசாரித்தனர். அதில், டொமினிக், ராம சாமி உட்பட 3 பேர் இக்காரியத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, டொமி னிக், ராமசாமி ஆகிய இருவரை வரழைத்த அதிகாரிகள், மூன்றாவது நபர் யார்? வெளி நாட்டிலிருந்து அரியவகை உயிரினங்களை கொடுத்து அனுப்பியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் நலம் குன்றிய மூதாட்டியை தூக்கி சென்ற அவலம்
உதகை, நவ.11- உதகை அருகே கேத்தியில் முறையான சாலை வசதி இல்லாததால் உடல் நல குறைவு ஏற்பட்ட மூதாட்டியை சேரில் அமர வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஹாலன்நகர் பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் பெரும்பாலும் மலை காய்கறி தோட்டங்களிலும், கட்டுமான பணிகளுக்கும் தின கூலி வேலைக்கு சென்று வருபவர்கள். பல ஆண்டுகளாக இக்கிராமத்திற்கு முறை யான சாலை வசதி செய்து தரப்படாமல் உள் ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலை ரயில் பாதை வழியாகவும், வனப்பகுதி வழி யாகவும் நடந்து நகர்ப்பகுதிக்கு சென்று வரு கின்றனர். உடல் நிலை பாதிப்பால் அவதிப் படும் முதியோர்களை தொட்டில் கட்டி தூக்கி வர கூடிய அவல நிலையே நீடிக்கிறது. இந் நிலையில் 2 நாட்களுக்கு முன் திடீரென மூச்சு திணறலால் பாதிக்கப்படட தேவி என்ற மூதாட்டியை அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து கொண்டு, ஆக்ஸிஜன் சிலிண்டரை தனியாக இருவர் தோளில் தூக்கி கொண்டு தனியார் மருத்துவமனை சென்றுள் ளனர். இந்த காட்சிகள் சமூக வலை தலங்க ளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது.