districts

img

ரோப் கார் வசதிகள் குறித்து ஆய்வு

உதகை, மார்ச் 18- நீலகிரி மாவட்டம் உதகை எச்பிஎப்  பகுதியில் சாகச பூங்கா மற்றும் தொட்ட பெட்டா பகுதியில் ரோப் கார் வசதிகள்  சுற்றுலாத்துறையின் சார்பில் அமைப்ப தற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்பது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டம்  சுற்றுலா தலமாக விளங்குவதால், உள் மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களி லிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள்  தொடர்ந்து வருகை புரிகின்றனர். எனவே, ஒவ்வொரு ஆண்டும், உதகை யில் அதிக அளவில் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு இடங்களில்  சுற்றுலா தலங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    தொட்டபெட்டா காட்சி முனை முதல் மந்தாடா வரை சுமார் 1.74 கி.மீ தொலைவிற்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துதவற்கான சாத்திய  கூறுகள் உள்ளனவா என்பது குறித்து  சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை யங்கள் துறை அரசு முதன்மைச் செய லாளர், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த தொட்டபெட்டா பகுதி யில் உள்ள சூசைட் பாயிண்டிற்கு பொது மக்கள் சென்று பாதுகாப்பாக நின்று  பார்வையிடுவதற்கு ஏதுவாக தேவை யான நடவடிக்கைகள் எடுக்கவும், காட்சி முனையை புதிதாக அமைக்க வெளிநாட்டிலிருந்து 10 நாட்களுக்குள் கொண்டுவரப்பட்டு மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது,  சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக் குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக  மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி,  மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் மாவட்ட  வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்சஷினி, வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி  கழக மண்டல மேலாளர்  வெங்கடேஷ்,  உதகை வட்டாட்சியர் ராஜசேகரன் உட் பட அரசுத்துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.