districts

img

சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு

நாமக்கல், பிப்.16- மல்லசமுத்திரத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து நெடுஞ் சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமா னம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட் பட்ட, திருச்செங்கோடு உட்கோட்டத்தில், முடிவுற்ற மற்றும் நடைபெற்றுவரும் சாலை பணிகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை கட் டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். இதில், திருச்செங்கோடு – அரியா னூர் சாலையில் அமைந்துள்ள மல்லசமுத்தி ரம் – வையப்பமலை சாலையையும், மல் லியக்கரை – ராசிபுரம் – திருச்செங்கோடு –  ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்தார்.  இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்  பொறியாளர் குணா, திருச்செங்கோடு உதவி கோட்டப் பொறியாளர் தமிழரசி, உதவி பொறி யாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந் தனர்.