சேலம், அக்.8- சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் வன எல்லையான பாலாறு பகுதியில் சோதனைச்சாவடி அமைப்பது குறித்து இருமாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் - ஈரோடு மாவட்டங்களின் எல்லையான பாலாறு ப குதி கர்நாடகா மாநில எல்லையாகவும் அமைந்துள்ளது. இப்பகுதியில் சோதனைச்சாவடி அமைப்பது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அடிப்படையில் எல்லைப் பகுதியில் சோதனைச்சாவடி அமைப்பதற்கு தமிழ்நாடு அர சிற்கு உடனடியாக அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண்கபிலன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவகர், சேலம் மாவட்ட வன அலுவலர் கஷியப் ஷஷாங்க் ரவி, ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.