districts

img

மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வட்டாட்சியர் ஆய்வு

உடுமலை, ஜன.12- குருமலை, மாவடப்பு, குழிப்பட்டி ஆகிய மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகு திகளில் வெள்ளியன்று உடு மலை வட்டாட்சியர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்க ளின் குறைகளை கேட்டுள் ளார். உடுமலையில் கடந்த  வாரம் பெய்த கனமழையால்  மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில்  உள்ள வீடுகள் இடிந்து பாதிப்புக்குள்ளா னது. இதையடுத்து வெள்ளியன்று திருமூர்த் திமலைக்கு மேல் இருக்கும் குருமலை, மாவ டப்பு, குழிப்பட்டி ஆகிய மலைவாழ் மக்கள்  குடியிருப்பு பகுதிகளில் உடுமலை வட்டாட்சி யர் சுந்தரம் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட  மக்களின் குறைகளை கேட்டு, அரசு நடவ டிக்கை எடுக்கும் எனத் தெரிவித்து உள்ளார்.  கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆய்வு  செய்வது மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும், அவர்க ளின் தேவையான கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து எந்த  உறுதியும் அளிக்கப்படவில்லை. திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு செல்லும் சாலையை உடனடியாக அமைக்க வேண் டும். குழிபட்டியில் இருக்கும் பள்ளி கட்டி டத்தை சரி செய்து நிரந்தரமாக ஆசிரியர் இருப்பதை உறுதிபடுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றுவது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும் என மழை வாழ் மக்கள் தெரிவித்தனர்.