நாமக்கல், மார்ச் 29- மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நாமக் கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களவை பொதுத்தேர்தல், மார்ச் 16 ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு, 6 சட்டமன்ற தொகு திகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சா வடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற் றும் வகையில் அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக, குமாரபாளையம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவல கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மாவட்ட தேர் தல் அலுவலர் ச.உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொ டர்ந்து, குமாரபாளையம் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பள்ளி பாளையம் ஊராட்சி ஒன்றியம், வெப் படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப் பட உள்ள வாக்குச்சாவடி மையங் களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.