சேலம், அக்.17- சேலத்தைச் சேர்ந்த மூங்கில் கூடை தயாரிக்கும் பழங்குடி மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு பல் வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மலைக்குறவன் இனத்தைச் சார்ந்த மூங்கில் கூடை பின்னும் கைவினை கலைஞர் களுக்கு ஏற்கனவே வீட்டு அலங்கார பொருட்கள், சேர், டீ டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 27 பழங்குடி மலைக்குறவன் இனத்தைச் சார்ந்த கூடை பின்னும் கைவினை கலைஞர்களுக்கு இந்திய ஜவுளி அமைச்சகத்தின் மூலம் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு பூம்புகார் நிறுவ னத்தின் சேலம் மண்டல மேலாளர் போஸ், இந்திய ஜவுளி அமைச்சகத்தின் சேலம் மண்டல முதன்மை கண்காணிப் பாளர் ஞானபாண்டியன், சமூக ஆர்வலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.