திருப்பூர், ஆக.7- நூல் ஆசிரியர் ஆர்.பாலகி ருஷ்ணன் எழுதிய சிந்து முதல் வைகை வரை புத்தகங்களை பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புத னன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்ட அரங்கில் பொது நூலகத் துறை, ஆறுமுகம் அறக்கட்டளை மற்றும் அனிதா டெக்ஸ்ட்கார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத் திய நிகழ்ச்சியில், நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய, சிந்து முதல் வைகை வரை என்ற புத்தகங்க ளை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு புத னன்று வழங்கினார். திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் செயல்படும் 136 நூலகங்க ளுக்கு 2023 - 2024ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய நூல்கள் வாங்கி வழங்கப்பட்டுள் ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் 30 ஆண்டு கால உழைப்பில் உருவாக்கியுள்ள படைப் புத்தான், சிந்து முதல் வைகை வரை எனும் நூல். ஆறுமுகம் அறக்கட்டளை மற்றும் அனிதா டெக்ஸ்கார்ட் இந்தியா நிறுவன உரிமையாளர் இணைந்து இந்த நூலை 250 பிரதிகள் அச்சிட்டு நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளனர். தேவைக்கு ஏற்ப கூடுதல் பிரதிகள் அச்சிட்டுத் தருவதாக வும் தெரிவித்துள்ளனர் என்று அதிகா ரிகள் கூறினர். இந்நிகழ்ச்சியில் அயலகத் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்கு மார் ஜி.கிரியப்பனவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.