தருமபுரி, ஜூலை 14- நல்லம்பள்ளி அருகே சேறும், சகதி யுமாக மாறியுள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட் சிக்குட்பட்ட வள்ளுவர் நகர். இப்பகுதி குடியிருப்பு மற்றும் உழவர் சந்தை அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழைக்கு சேறும், சகதியுமாக மாறியிருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை யாக உள்ளது. இதனால் குடியிருப்புக ளுக்கு செல்லும் மக்கள் மற்றும் உழ வர் சந்தைக்கு, இருசக்கர வாகனம் மற்றும் நடந்து வரும் மக்கள், சேற்றில் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு சேறும், சகதியு மாக மாறியுள்ள சாலையை, புதிய தார்ச்சாலையாக அமைத்து தர வலியு றுத்தி பலமுறை அப்பகுதி குடியிருப்பு மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு கோரிக்கை விடுத்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என கூறப்படுகிறது. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி குடியி ருப்பு மக்கள், வள்ளுவர் நகர் பகுதி யில் சேறும், சகதியுமாக மாறியுள்ள சாலையில் நாற்று நட்டு நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கவுரம்மாள் அரிச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைய டுத்து பேச்சுவார்த்தைக்கு பின் உங்க ளது கோரிக்கை குறித்து உயர் அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதியளித்தார். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனை வரும் அங்கிருந்து கலைந்து சென்ற னர். முன்னதாக, இப்போராட்டம் அப் பகுதியினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.