districts

img

மலைவாழ் மக்கள் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி!

உடுமலை, பிப்.4- மலைவாழ் மக்கள் குடியிருப்பு களில் சிதலமடைந்து காணப்படும் பள்ளிக்கட்டடங்களை புனரமைக்க  மறுக்கும் அதிகாரிகளால், அப்ப குதி குழந்தைகளின் கல்வி கேள் விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள் ளது. மலைவாழ் மக்களின் குழந்தை கள் ஆரம்பக்கல்வி கற்க அரசின் சார்பில், மக்களின் குடியிருப்பு பகு தியில் ஆரம்பப்பள்ளிகள் அமைக் கப்பட்டுள்ளன. ஆனால், இப்பள்ளி களின் கட்டடங்கள் சிதலமடைந் தும், ஆசிரியர்கள் வருகையும்  உறுதியில்லாத காரணத்தால் மலைவாழ் மக்கள் குழந்தைகளின்  கல்வி முழுமையாக மறுக்கப்படு கிறது. இந்நிலை உடுமலை தாலுகா விற்குட்பட்ட திருமூர்த்திமலை,  மேல்குருமலை, கீழ்குருமலை,  குழிபட்டி, மாவடாப்பு மற்றும்  பூச்சிக்கொட்டாம் பாறை மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி யில், ஏராளமான மக்கள் வசித்து  வருகிறார்கள். இங்கு வசிக்கும் குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்க  திருமூர்த்திமலை, கீழ்குருமலை, குழிபட்டி மற்றும் மாவடாப்பு பகுதி யில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வருகின்றனர். திருமூர்த்திமலை தவிர மற்ற மூன்று இடங்களில் இருக்கும் பள்ளிக்கூடம் மலைப் பகுதியில் உள்ளன. இங்கு வேலைக்கு வரும் ஆசிரியர் கள் அந்த பள்ளிக்கட்டடத்தில் தான்  தங்கி வேலை செய்ய வேண்டும்.  மேலும், ஆசிரியர்கள் தங்குவதற்கு  தனியாக பள்ளியின் அருகில் கட்ட டம் உள்ளது. ஆனால், இப்பள் ளிக்கு பல வருடங்கள் பெயருக்கு மட்டுமே மாதம் ஒருமுறை ஆசிரி யர்கள் வருவதாகவும், அவர்கள்  மாணவர்களுக்கு கல்வி கற்றுதரு வது இல்லை எனவும் மலைவாழ்  மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கூறு கையில், எங்கள் குடியிருப்புப் பகு தியில் தமிழக அரசின் சார்பில் மூன்று ஆரம்பப்பள்ளிகள் உள் ளன. இந்த கட்டடங்கள் முறையாக  பராமரிக்காததால், மிகவும் சிதம லைடைந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தால் எவ் வித நடவடிக்கையும் எடுப்ப தில்லை. பலமுறை அதிகாரிக ளுக்கு புகார் தெரிவித்த நிலையில்,  கடந்தாண்டு உடுமலை ஒன்றிய  அலுவலத்தில் இருந்து பொறியா ளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரி கள் மழைக்கு இடிந்த குழிபட்டி பள் ளிக்கட்டடத்தை ஆய்வு செய்தனர்.  அப்போது மலைவாழ் மக்கள்  சங்க நிர்வாகிகள், இதுபோன்று கீழ்  குருமலையில் பள்ளிக்கட்டடம் மிக வும் ஆபத்தான நிலையில் உள்ளது  என்றும், அந்த கட்டடத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், எதையும் கண்டு கொள்ளாமல் மாவடாப்பு பகுதிக்கு சென்றவர் கள், தற்பொழுது வரை பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கா மல் உள்ளனர்.  மேலும், இந்த மூன்று  பள்ளிகளுக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் உள்ளார்கள். அவர்க ளுக்கு தங்க இடம் இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள். அங்கு படிக்கும் அனைத்து குழந் தைகளும் முறையாக கல்வி கற்ற காமல், ஆரம்பக்கல்வி முடித்து ஆறாம் வகுப்பில் கல்வி கற்க சிரமப் படுகின்றனர். இதனால் படிப்பை தொடர முடியாமல் பலர் விட்டுவிடு கின்றனர். மலைவாழ் மக்களின் உரிமை களை பறித்து பல ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்பொழுது மலைவாழ் மக்கள் சங்கத்தின் பல  போராட்டங்கள் நடத்தியதால் மலை பொருட்கள் மற்றும் விவ சாயம் செய்ய தற்பொழுதான் வனப் பட்டா தரப்பட்டது. இந்நிலையில், வரும் தலைமுறையினர் கல்வி  கற்க அரசு அனைத்து வசதிகளும்  செய்த நிலையில், தரமான பள்ளிக் கட்டடம் மற்றும் ஆசிரியர்கள் வரு கையை உறுதி செய்து முறையாக கல்வி கற்று தர வேண்டும் என்பதே  மலைவாழ் மக்களின் கோரிக்கை யாக உள்ளது.