districts

img

குடிக்க தண்ணீர் இல்ல ஆனைமேல அம்பாரியாம்

குழாயை திறந்தால் வாரத்தின் ஏழு நாட் களிலும், ஒரு நாளின் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் என முந் தைய அதிமுக ஆட்சியாளர்கள் வரிந்து கட் டிக்கொண்டு திணித்த சூயஸ் நிறுவனத்தின் பில்டப் தற்போது சரிய துவங்கியுள்ளது. குடிக்க தண்ணீர் இல்ல, ஆனைமேல அம் பாரியாம் என்கிற பழமொழி சூயஸ் நிறுவனத் தின் சமீபகால செயல்பாடுகள் கோவை மாந கர மக்களுக்கு நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோக உரி மையை சூயஸ் என்கிற பிரெஞ்ச் நிறுவனத் திற்கு சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப் பந்தத்தை அன்றைய அதிமுக தலைமை யில் இருந்த ஆட்சி கோவை மாநகராட்சிக்கு  வழங்கியது. கோவை மாநகர மக்களின் குடிநீர் விநி யோக உரிமையை சூயஸ் நிறுவனத்திடம் வழங்ககூடாது. கோவை மாநகராட்சியே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இனைந்து விநியோக நடவடிக்கையை எப்போதும் போல் தொடர வேண்டும் என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட மக் களை நேசிக்கிற இயக்கங்கள் வலியுறுத்தி யது, போராடியது.  அன்றைய அதிமுக அரசு  சூயஸ் நிறுவனத்தை எதிர்த்து பேசினாலே வழக்கு, கைது என சர்வாதிகார நடவடிக்கை யில் ஈடுபட்டது. இத்திட்டத்திற்கு எதிரான கொந்தளிப்பு கோவை மாவட்டத்தில் அதிக ரித்து வந்த நிலையில், அன்றிருந்த தமிழக நகராட்சி நிர்வாக ஆணையாளர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், கோவை மாநக ராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம், பழைய 72 வார்டுகளான தற்போதைய 60 வார்டு களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மீதியுள்ள 40 வார்டுகளுக்கு இந்த திட்டம் விரி வாக்கப்படும். 

தற்போது, ஒரு பகுதிக்கு அதிக அழுத் தத்திலும், மற்றொரு பகுதிக்கு குறைந்த அழுத்தத்திலும் தண்ணீர் வருகிறது. ஆனால், சூயஸ் நிறுவனம் செயல்படுத்தினால் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்தியாவி லேயே ஒரு லட்சத்து 70 ஆயிரம் இணைப்பு களுக்கு ஒரே நேரத்தில் தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது இது தான் முதல் முறை. இவர்களிடம் உள்ள நவீன தொழில் நுட்பத்தால் சூயஸ் குழாய் செல்லும் பாதையில் குழாய் உடைந்து நீர்  கசிந்தாலோ அல்லது யாராவது கடப் பாறையை கொண்டு தோண்டினால் உடனடி யாக சூயஸ் நிறுவனத்தில் அலுவலகத்தில் உள்ள அலாரம் ஒலி எழுப்பும். இந்த எச்ச ரிக்கை சமிக்கையை உள்வாங்கிக்கொண்டு உடனே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத் திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற் கொள்வார்கள் என்கிற ஓவர் பில்டெப்பை சூயஸ் குறித்து பேசினார்.

ஆனால், மக்கள் நலனில் அக்கறை கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக் கங்கள் ஆட்சி மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் கூறுவது அனைத்தும் பொய். ஒரு சொட்டு நீரைக்கூட யாராலும் உற்பத்தி செய்ய முடியாது. இயற்கையாக கிடைக்கிற நீரை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது என்பதை அரசு நிர்வாகங்களே மேற்கொள்ள வேண் டும். தண்ணீரை  லாப நோக்கம் கொண்டதாக மாற்றக்கூடாது. அத்தகைய பணியைத்தான் சூயஸ் நிறுவனம் மேற்கொள்கிறது என குற்றம்சாட்டினர். இத்திட்டத்தின்படி, பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படும். குடிநீர் கட்டணம் வீட்டின் பரப்பளவின் அடிப்படை யில் நிர்ணயம் செய்யப்படும். குடிநீரை பயன் படுத்துவதற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக் கப்படும். வசதி படைத்தவர்களுக்கு தடை யின்றி விநியோகமும், அடுத்த நிலையில் உள்ளவர்கள் தண்ணீருக்காக ஏங்கும் நிலை யும் உருவாகும் என எச்சரித்தனர். இவையெல்லாம் எதனையும் காது கொடுத்து கேட்கவில்லை. தான் பிடித்த முய லுக்கு மூன்று கால்கள் என்கிற நிலையில் தான் அன்றைய அதிமுக அரசு நின்றது. இன் றைய திமுக அரசும் எந்தொவொரு முடிவும் எடுக்காத நிலையில் உள்ளது. இந்நிலையில் தான் கோவை மாநகரத்தின் பிரதான பகுதி யான சௌரிபாளையம் (கோவை மாநக ராட்சி 50 ஆவது வார்டு) சாலையில் சூயஸ்  நிறுவனத்தின் மேற்பார்வையில் உள்ள குடி நீர் குழாய் உடைந்து 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வெளியேறி வீணாகி வருவதை தடுக்க முடியவில்லை என்பது அம்பலத்திற்கு வந் துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி நிர்வா கம், சூயஸ் நிறுவனத்தின் மீது புகார் அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என  மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறு கையில், கோவை புலியகுளத்திலிருந்து வரத ராஜபுரம் செல்லும் சாலையில், சவுரிபாளை யம் முதல் உடையாம்பாளையம் வரை உள்ள சாலையில் 6  இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட் களுக்கு மேலாக குடி தண்ணீர் வீணாக வெளி யேறி வருகிறது. எங்கள் பகுதியில் சிறுவானி, பில்லூர், ஆழியாறு அணைகளில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள் மூலம் ஒருவாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. சூயஸ் வந் தால் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவோம்  என்றார்கள். ஆனால், வாரம் ஒரு முறை மட் டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோடைக்காலமும் துவங்கியுள்ள நிலையில்  குடிநீர் பற்றக்குறை அதிகமாகும். இதனை உணராமல் இப்படி பத்து நாட்களுக்கு மேலாக நீர் கசிந்து சாலையில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனைவரிடமும் புகார் தெரிவித்து விட்டோம் யாரும் எட்டியே பார்ப்பதில்லை என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் கூறியதா வது, சூலூர் செல்லும் இந்த பிரதான குழா யில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரி செய்ய, முழுமையாக நீரோட்டத்தை நிறுத்த வேண்டும். இதனால் சூலூருக்கு குடிநீர் செல்வது தாமதமாகும் என்பதால், சரியான நேரத்தில் உடைப்புகள் சரி செய்யப்படும் என்றார். இந்நிலையில் வெள்ளியன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத் தில் நடைபெற்ற கூட்டத்தில் 24 மணி நேர குடி நீர் திட்ட அலுவலர்கள் மற்றும் சூயஸ் நிறுவ னத்தின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் துணை ஆனையாளர் சர்மிளா இந்த நீர் கசிவு குறித்து கேட்டுள்ளார். அதிகாரிகளின் விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் நீர் கசிவை சரிசெய்ய நான்கு நாட்களா என கடு மையாக சாடியுள்ளார். சூயஸ் நிறுவனத் தின் மெத்தன நடவடிக்கையால் தாங்களும் திட்டு வாங்குவதாக அதிகாரிகள் புலம்பிக் கொண்டே வெளியே வந்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து சூயஸ் நிறுவன அதி காரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, புகார் வந்துள்ள இடத்திற்கு ஆட்களை அனுப் பியுள்ளோம் ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவோம். குடிநீர் குழாய் பராமரிப்பிற்காக மாநகராட்சி நிதி வழங்க வேண்டும். ஆனால், சுமார் 80 கோடி ரூபாய் வரையில் எங்கள் நிறு வனத்திற்கு பாக்கிவைத்துள்ளார்கள். இதே போன்று சூயஸ்  திட்டத்தில் இதுவரை மேற் கொண்ட பணிகளுக்காக சுமார் ரூ400 கோடி  வரை மாநகராட்சி பணம் எங்களுக்கு தர வேண்டியுள்ளது. ஆகவே இதுபோன்ற புகார் கள் மீது உடனடியாக கவனம் செலுத்த முடிய வில்லை. மற்ற பணிகளும் தேக்கமடைந் துள்ளது என்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், மக்களின் குடிநீர் விநியோக உரிமையை தனியாரிடம் வழங்ககூடாது என்பதே மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைப்பாடு. ஆகவே, தொடர்ந்து சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகி றோம். தண்ணீர் விற்பனைக்கானதல்ல இதில் லாப நோக்கம் பார்க்க கூடாது. சேவை செய்வதற்கான பணியாக இது இருக்க வேண் டும்.  

ஆகவேதான், மாநகராட்சியே குடிநீர் விநி யோகத்தை செய்ய வேண்டும். தொழில் நுட்ப அறிவு வேண்டும் என்றால் கோவை  மாவட்டத்திலேயே  நீர் மேலான்மை குறித்த அறிவு உள்ள நபர்கள் ஏராளம் உள்ள னர். அவர்களை அழைத்து குடிநீரை விணாக் காமல் சீராக விநியோகப்பது, இதன் தொழில் நுட்பம் குறித்து ஆலோசனையை பெற முடி யும். இவர்களின் உதவியை பெற முடியும். சிறு  பிரச்சனைக்கே பணம் வரவில்லை என்ப தால் பணிகளை முடக்கும் சூயஸ் நிறு வனம். பெரிய பிரச்சனை என்று வந்துவிட் டால் தண்ணீருக்காக ஏங்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதை இப்போதாவது மாநகராட்சி அதிகாரிகள் உணர வேண்டும். உண்மை நிலையை தமிழக அரசிற்கு எடுத்துச் சொல்லி சூயஸ் நிறுவனத்துடனான ஒப் பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய அவசி யத்தை அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் என்றார். சூயஸ் என்கிற பேராபத்து தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது என்பதை கோவை மக்கள் புரிந்துள்ளார்கள். ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எதிர் பார்ப்பு…

-அ.ர.பாபு, கோவை.