கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி : கோவை, நீலகிரியில் கண்காணிப்பு தீவிரம்
கோவை, அக்.29- கேரள மாநிலத்திலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களை தீவிர கண்காணிப்புக்கு பின்னர் அனு மதிக்கப்படுகின்றன. கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்னையில் கடந்த 3 நாட் களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்து களுக்கு மேற்கொண்ட பரிசோதனை யில் பறவை காய்ச்சலுக்கான அறி குறி இருப்பது தெரிய வந்தன. இதை யடுத்து, 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தி யுள்ளது. இந்நிலையில், கோவை - கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக் கட்டி, பட்டிசாலை, தோலம்பாளை யம் உள்பட 12 சோதனைச் சாவடி களில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்னைகளிலும் கண்கா ணிப்பு பணிகள் நடைபெற்று வருகின் றன. கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்பி வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக மாதந்தோறும் பற வைகளின் எச்சங்கள் உள்ளிட்ட 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செ்ய்யப்பட்டது. அதில் தற்போது வரை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என கால்நடை பராமரிப்புத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி
இதேபோன்று நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கக்க னல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடி களில் ஒரு கால்நடை உதவி மருத்து வர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராம ரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு , போலீசார், வனத்துறை மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, வயநாடு மாவட் டத்தில் அதிகளவில் கோழிப் பண் ணைகள் உள்ளதால், அங்கி ருந்து இறைச்சியையோ, முட்டை களையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக் கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாக னங்கள் உட்பட அனைத்து வாகனங் களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக் கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் பற வைகள் தொடர்புடைய பொருட் களை மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி ஆட்சி யர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஊதியம் குறித்து நிறுவனங்களில் ஆய்வு
ஈரோடு, அக்.29- குறைந்தபட்ச ஊதிய சட் டத்தின் கீழ் ஈரோடு மாவட் டத்தில் புகையிலை தொழில் நிறுவனங்கள், கல்வி பயிற்று விக்கும் நிறுவனங்களில் தொழிலாளர் அலுவலர்்கள் சிறப்பாய்வு மேற்கொண் டனர். இதில், குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அரசால் நிர் ணயிக்கப்பட்ட ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங் கப்படுகிறதா என 22 புகையி லை தொழில் நிறுவனங்கள், கல்வி பயிற்றுவிக்கும் நிறு வனங்களில் ஆய்வு செய்த னர். அந்நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பிற அம்சங்கள் குறித்தும் விளக்கினர்.
விவசாயிகளைப் புறக்கணிக்கிறாரா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்?
திருப்பூர், அக். 29 - திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் தொடர்ச்சியாக நான்கைந்து கூட்டங்க ளில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் பங்கேற்காமல் புறக்கணிக் கிறார் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசா யிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வர வில்லை. அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். இந்நிலையில் விவ சாயிகள் பேசும்போது, மாவட்ட ஆட்சியர் தொடர்ச்சியாக விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்திற்கு வராமல் புறக்கணிக் கிறார் என்றனர். நிர்வாகத் தரப்பில், அமைச்சரின் நிகழ்ச்சிக்கு அவர் சென்றுவிட்டதாக பதில் கூறினர். ஆனால் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் திட்டமிடும்போதே, மற்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசா யிகள் குறைதீர்க் கூட்டம் நடத்தும்போது அமைச்சர் நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறி னர். மேலும், அதிக அளவிலான விவசாயிகள் திரண்டு வந்தி ருந்த நிலையில், அவர்களில் பலர் அமர்வதற்கு இடமில்லா மல் அந்த அறையில் நின்று கொண்டிருந்தனர். மேலும் பலர் அறைக்கு வெளியே நின்று கொண்டு கூட்டத்தை கவனிக்கும் நிலை இருந்தது. கடந்த காலங்களில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஆட் சியரக இரண்டாவது தளத்தில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் ஆட்சியர் எஸ்.வினீத் இக்கூட்டத்தை தரை தளம் அறை எண் 20க்கு மாற்றிவிட்டார். இங்கு விவசாயிகள் அமரவும் இட மில்லை, அவர்கள் மனு எழுதுவதற்கு உரிய மேசை வசதியும் இல்லை. எனவே ஏற்கனவே நடத்தப்பட்ட இரண்டாவது தளத்தில் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் விவசாயி கள் வலியுறுத்தினர். தொடர்ந்து பல கூட்டங்களாக இப்பிரச்சனையை எழுப்பி வந்தாலும், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் சுமூக நிலைபாட்டை மேற்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளனர் என்றும் விவசாயிகள் கூறினர். அத்துடன் விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் நடக்கும் விப ரம், விவசாயிகளுக்கான திட்டங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தின் செய்தி துறை மக்கள் தொடர்பு அதிகாரி முக நூல் உள்ளிட்ட ஊடகங்களில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இங்கிருக்கும் மக்கள் தொடர்பு அதிகாரி எதுவும் செய்வ தில்லை என்றும் இக்கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறி னர்.
மாதந்தோறும் 5ஆம் தேதி வனச்சரக குறை தீர் கூட்டம்
திருப்பூர், அக். 29 - ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி உடுமலைப்பேட்டை ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவல கத்தில் வனச் சரக அளவிலான குறை தீர்க் கூட்டம் நடத்தப்ப டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுமலைப்பேட்டையில் வருவாய் கோட்டாட்சியர் நடத் திய விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர் வனச்சரக அளவிலான குறை தீர்க் கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்தனர். திருப்பூர் மாவட்ட வனச்சரக அளவில் வன உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் வன உயிரி னங்களால் விவசாயிகளுக்கும், குடிமக்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக முறையிடுவதற்கு இக்கூட்டம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இக்கோரிக்கையை ஏற்று வரும் நவம்பர் 5ஆம் தேதி உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகத்தில் அனைத்துத் தரப்பினரும் பங் ங்கேற்கும் வகையில் குறை தீர்க் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு வன உயிரினங்களால் விவசாய பகுதிக ளில் பாதிப்பு ஏற்படுவது குறித்தும், வன உயிரினங்கள் பாது காப்பு குறித்தும் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் தெரிவிக் கலாம் என கூறப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் டிஜிபி ஆய்வு
திருப்பூர், அக்.29- பல்லடம் காவல்நிலையத்தில் வெள்ளியன்று டிஜிபி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் காவல் நிலையம் அமைந்துள்ளது. கோவையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் வழியில் பல்லடம் காவல் நிலை யத்துக்கு வியாழக்கிழமை இரவு தமிழக காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு வருகை தந்தார். அவரை பல்லடம் துணைக் காவல் கண்காணிப்பாளர் செளமியா, ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் வரவேற்றனர். பின்னர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாரிடம் நலம் விசாரித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
திருப்பூரில் விவசாயிகளுக்கு 228.59 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது'
திருப்பூர், அக்.29- திருப்பூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக 22,304 விவசாயிகளுக்கு ரூ.228. 59 கோடி பயிர்க் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் திருப்பூா் மண்டல இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக பயிர்க் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் போன்றவை வழங்கப்பட்டு வரு கின்றன. உரிய தவணைத் தேதியில் பயிர்க் கடன் திருப்பி செலுத்தும் விவசாயிகள் வட்டி செலுத்த தேவையில்லை. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2022 ஏப்ரல் முதல் அக்டோபா் 27ஆம் தேதி வரை 19,672 விவசாயிகளுக்கு ரூ.209.99 கோடி பயிர்க் கடனும், 2,632 விவசாயிகளுக்கு ரூ.18.60 கோடி கால்நடை பராமரிப்பு கடன் என மொத்தம் 22,304 விவசாயிக ளுக்கு ரூ.228.59 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நில உடைமை தொடா்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடா்பாக கிராம நிர்வாக அலுவலா் சான்று, பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடா்பு கொண்டு உரிய மனுவை சமா்ப்பித்து பயிர் கடன் மற்றும் இதர கடன்களைப் பெற்று பயனடையலாம். மேலும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப் பினா் படிவத்தைப் பெற்று ரூ.100 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.10 என மொத்தம் ரூ.110ஐ செலுத்தி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனைத்து வகை யான கடன்களையும் பெற்றுப் பயனடையலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளைப் பின்பற்றாத விடுதிகளின் மீது நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை
திருப்பூர், 29- திருப்பூர் மாநகரில் விதிமுறை களைப் பின்பற்றாமல் இயங்கி வரும் தனியார் தங்கும் விடுதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாநக ரக் காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளா்கள், மேலாளா்கள் பங் கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகு திகளில் உள்ள 50 தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், மேலாளா்கள் பங் கேற்றனா். இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் பேசியதாவது: திருப்பூா் மாநகரில் தங்கும் விடுதிக ளில் உள்ளே வருபவா்கள் மற்றும் வெளியே செல்பவா்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். நாள்தோறும் தங்கிச் செல்பவா்களின் விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையங்க ளுக்கு தெரிவிக்க வேண்டும். அறையில் தங்கும் அனைத்து வாடிக்கை யாளா்களின் விவரங்களையும் முறை யாக பராமரிக்க வேண்டும். வாடிக்கை யாளா்களின் கைப்பேசி எண் சரியா னதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விடுதியின் வரவேற்பு அறையில் வாடிக்கையாளரின் முகம் தெளிவாக தெரியும் வகையிலும், வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தின் எண் தெரியும் வகையிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். விடு தியில் தங்கும் நபரின் அடையாள அட் டையை மட்டுமே வாங்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமலும், வேறு நபா்களின் அடையாள அட்டை களைப் பயன்படுத்தும் நபா்களை தங்க அனுமதிக்கக் கூடாது. மேலும், சீட்டாட் டம், விபசாரம் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல் களை அனுமதிக்கக் கூடாது. இந்த விதி களை கடைப்பிடிக்காத தங்கும் விடுதி களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:49.46/60அடி நீர்வரத்து:890கன அடி வெளியேற்றம்:1132கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 81.80/90அடி. நீர்வரத்து:335கனஅடி வெளியேற்றம்:845கன அடி
குடும்ப அட்டை ஒப்படைப்பு
திருப்பூர், அக். 29- பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் கடைமடை பகுதியில் அரசாணை மற் றும் நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடிக்காமல் நீர் விநி யோகம் செய்யாததை கண் டித்து விவசாயிகள் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவ லரிடம் ஒப்படைத்தனர்.அத் துடன் காத்திருப்பு போரட்டத் தில் ஈடுபட்டனர்.