districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு

கோவை, டிச.16- கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஜெய்பூர், ஸ்ரீநகர், புவ னேஸ்வர், பெங்களுர், ரூர்கேலா என பல்வேறு நகரங்களிலி ருந்து மேயர்கள், துணை ஆணையர்கள் ஆய்வு மேற்கொண் டனர். கோவை - அவிநாசி சாலையிலுள்ள தனியார் விடுதியில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த கருத் தரங்கம் சனியன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து, வர வேற்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 7 குளங் களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித் தும், திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குநர் குணால் குமார் பேசுகையில், நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்றால் ஷாங்காய், நியூயார்க் போன்ற நகரங்களாக மாற்ற உள்ளதாக எண்ணு கின்றனர். ஆனால், சமூகம் பல ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அந்த நிலைமைக்கு மாற்றுவதே இந்த திட் டம். நகரங்களில், பொது இடங்களில் இடைவெளி என்பது அவ சியமானது. கொரோனா காலத்தில் நகரங்கள் காலியாகி கிராமப்புறங்களுக்கு படையெடுத்தது. மக்கள் அமைதி யாக, நிம்மதியாக வாழ்வதற்கு, நேரத்தை செலவிடுவதற்கு நகரங்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற கருத்தரங்கம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக அறிந்துகொண்டு அவரவர் பகுதிகளில் செயல்படுத்தவும், அதேபோல் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள மற்ற நகரங்களை சேர்ந்தவர்கள் மூலம் அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் சிறப்பம்சங்களை தெரிந்துக்கொள்ள என பல வகை களில் உதவுகிறது, என்றார். இக்கருத்தரங்கில் ஜெய்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி  சின்ஷவாட், பெங்களுர், ரூர்கேலா என பல்வேறு நகரங்களிலி ருந்து மேயர்கள், துணை மேயர்கள், மாநில உயர் அதிகாரி கள், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட வன அலுவ லர் ஜெயராஜ், துணை மேயர் வெற்றி செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து உக்கடம் பெரிய குளம், “ஐ லவ் கோவை” செல்பி பாயிண்ட், பந்தையசாலை மீடியா டவர் மற்றும் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் உள்ள கட்டமைப்பு என ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வை யிட்டு, திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அக்குழு வினர் அறிந்து கொண்டனர்.

“கனவு ஆசிரியர்” விருது சேலம் அரசு பள்ளி ஆசிரியை தேர்வு

சேலம், டிச.16- தமிழ்நாடு முழுவதும் 8,096 பேர் பங்கேற்ற ‘கனவு ஆசிரி யர்’ தேர்வில் தம்மம்பட்டி அரசு பள்ளி ஆசிரியை இந்த விரு துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில்,  மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர் களை இனம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘கனவு ஆசிரியர்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆசிரியர் களை தேர்வு செய்ய மூன்று நிலைகள் கடைப்பிடிக்கப்பட்டன. முதலில் அவரவர்கள் வீடுகளிலிருந்தபடி இணைய வழியில் தேர்வு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 8,096 பேர் பங்கேற்றனர். மூன்று நிலை தேர்வு முறைகளில் ஆசிரியர் களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள் கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித் தல் உத்திகள் ஆகியவை மீது மதிப்பீடு செய்யப்பட்டது. இறுதி யில் 75 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றவர் கள் மட்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, 41  முதுநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 162 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 ஆசிரியர்கள், மாநிலம் முழுவதும் ‘கனவு ஆசிரியர்’ விருதிற்கு தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வரும் டிச.19 ஆம் தேதி நாமக்கலில் தனியார் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் 380 பேருக்கும் கனவு ஆசிரியர் விருது வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட உள்ளனர். இவர்களில் 90 சத விகிதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ள னர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் தேர்வான 16 பேரில்  தம்மம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த  ஆங்கில பட்டதாரி ஆசிரியை சி.மே.ஜெனிதா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 82 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்வான இந்த ஆசிரியைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை கஸ்தூரி தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

உதகை, டிச.16- சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் டேன்டீ பகுதியில் இருந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயி லைத் தோட்டம் டேன்டீ சரகம் 3 பகுதியில் பெண் தொழிலா ளர்கள் பசுந்தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது  மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அலறி  அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து டேன்டீ நிர்வாகம்  வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சேரம் பாடி வனச்சரகர் உத்தரவின்பேரில் வேட்டைத்தடுப்பு காவலர் கள் சம்பவ இடத்திற்கு சென்று தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப் பாம்பை அரை மணி நேரமாக போராடி பிடித்தனர்.

சிறுமி கர்ப்பம்: 12 வயது சிறுவன் கைது

கோவை, டிச.16- கோவையில் 13 வயது சிறுமி கர்ப்பமான நிலையில்,  அதற்கு 12 வயது சிறுவன் காரணம் என கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் எல்லைக்குட் பட்ட பகுதியில் ஏராளமான பீகாரைச் சேர்ந்த குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். அதில் ஒரு தம்பதிக்கு 13 வயதில் மக ளும், மற்றொரு தம்பதிக்கு 12 வயதில் மகனும் உள்ளனர். அரு கருகே உள்ள வீடுகளில் இரு குடும்பத்தினரும் வசித்து வரு கின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் சிறு வன், சிறுமி மட்டுமே வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலை யில், சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள மருத்துவம னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் கள் சிறுமியை பரிசோதித்தபோது, 4 மாதம் கர்ப்பமாக இருப் பது குறித்து தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் பெற் றோர் விசாரித்த போது, பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரத்தில் தனியாக இருக்கும் 13 வயது சிறுமியை, பக்கத்து  வீட்டு 12 வயது சிறுவன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய் தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறு மியின் பெற்றோர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார், சிறுவனை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் சிறுவனை நீதிபதி முன்பு நேர்நிறுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்  அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டா லும், சிறுமியின் கர்ப்பத்துக்கு சிறுவன் தான் காரணமா? என்பதை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனை மேற் கொண்டுள்ளனர்.

பெண் படைப்பாளர்களுக்கான பயிற்சி
 

கோவை, டிச.16- பெண் படைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் கோவை  சரோஜ் மகாலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில் சனியன்று நடைபெற்றது.  படைப்பார்வமிக்க பெண்களை வளர்தெடுக்கும் விதமாக   இந்த பயிற்சி முகாம் தமுஎகச சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டது. இந்நிகழ்வில் கவிஞர் செ.கவிதா வரவேற்றார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் மீ.உமாமகேஸ்வரி நோக்கவுரையாற்றினார். கவிதை கதை என இரண்டு தலைப்பு களில் நடைபெற்ற பயிற்சி அமர்வில், எழுத்து கட்டமைப்பு, நுட் பம் எனும் தலைப்பில் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் நவீன கவிதையின் சொற்பதம் எனும் தலைப்பில் கவி ஞர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் உரையாற்றினர். சிறு கதை அமர்வில், கதையும் களமும் எனும் தலைப்பில் எழுத்தா ளர் அகிலாவும், கதையும் காலமும் எனும் தலைப்பில் எழுத் தாளர் இரா.முருகவேள் ஆகியோரும் உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் உமர் பாரூக், தமுஎகச மாவட்ட செயலாளர் அ.கரீம், மாவட்ட தலைவர் டி.மணி உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர்.

தொப்பூர் கணவாயில் ரூ.775 கோடியில் மேம்பால சாலை

தருமபுரி, டிச.16- தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தைத் தடுக்க ரூ.775 கோடியில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற இருப்பதாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித் தார்.  தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் செல்லும் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின் றன. இங்கு நாள்தோறும் ஏதாவது ஒரு சிறு விபத்து, உயிரிழப்பு உள் ளிட்டவை நடந்து வருகிறது. இந்நி லையில், தொப்பூர் கணவாய் பகுதி யில் சாலையை மாற்று பாதையில் சீர மைத்தாள் விபத்துக்களை தடுக்க முடியும் என்பதால் மருத்துவர் செந் தில்குமார் எம்பி., மத்திய போக்குவ ரத்து துறை அமைச்சர் நிதின் கட் கரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்ந்த உயர் அலுவலர்களை தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி வந் தார். இதனையேற்று, ஒன்றிய அரசு  ரூ.775 கோடி மதிப்பீட்டில்  6.6 கிலோ  மீட்டர் சாலையை சீரமைக்க ஒப்பந் தம் கூறியுள்ளது. இதுகுறித்து செந்தில்குமார் எம்.பி., கூறுகையில், சாலை அமைக் கப்பட்டால் உயிரிழப்பு குறையும், இச் சாலையை பொதுமக்கள் பயன்படுத் தும் நேரமும் குறையும், மேலும் இந் தியாவிலேயே தொப்பூர் கணவாய்  பகுதியில் தான் அதிக விபத்துகள் நடைபெறும் என்ற நிலை மாறும். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் எங்கு சென்றாலும் நான்கு வழிச் சாலை உள்ளது. பெங்களூரு செல்ல இரண்டு புதிய வழிச்சாலை அமைக் கப்பட்டுள்ளது. தருமபுரி நாடாளு மன்ற தொகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதி களை விட அதிகமான போக்குவரத் துக்கு மற்றும் விவசாயத்திற்கு தேவையான அதிக நிதியை பெற்று  தந்திருக்கிறோம். ஒகேனக்கல் கூட்டு  குடிநீர் திட்டம் இரண்டாம் அழகு திட் டத்திற்கு ரூ.7800 கோடி நிதியில், ஒன் றிய அரசிடமிருந்து ரூ.4000 கோடி யும், ஜீக்காவிடமிருந்து மீதமுள்ள தொகையும் பெற நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தருமபுரி தொகுதி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட் டங்கள் தருமபுரி மாவட்டத்தில் செய லாக்கத்திற்கு வந்துள்ளது, என் றார்.

இறந்த பின்னும் ஒளி தரும் தோழர் வி.பி.எஸ்
இறந்த பின்னும் ஒளி தரும் தோழர் வி.பி.எஸ் திருப்பூர், டிச.16- தோழர் வி.பி.எஸ் இறந்த பின்னும் பிறருக்கு ஒளி தர கண்  தானம் செய்து விட்டு சென்றுள்ளார் என வெள்ளியன்று நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டி னர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வேலம்பா ளையம் நகரக்குழு செயலாளர் தோழர் வி.பி.சுப்பிரமணி யம் 15 ஆம் தேதி வெள்ளியன்று காலமானார். இதை யொட்டி வேலம்பாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற் றது. ச.நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால்,  கே.ரங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 11 ஆவது  மாமன்ற உறுப்பினர் எஸ்.செல்வராஜ், தந்தை பெரியார் திரா விடர் கழகம் சண்.முத்துக்குமார் ஆகியோர் தோழர் வி.பி.எஸ்  வேலம்பாளையம் பகுதியில் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசி னார்கள். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் உட்பட நகரகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள்   திரளானோர் பங்கேற்றனர்.

குப்பைகள் எடுக்க 13 புதிய வாகனங்கள்
திருப்பூர், டிச.16- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நல்லூர் மூன்றாவது மண் டலத்திற்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதற் காக, 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 13 புதிய வாகனங்கள்  வாங்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோ றும் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாகனங்கள் மூலம் அன்றாடம் எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்காக மாநகராட்சியில் நூற்றுக்கணக்கான வாக னங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதனிடையே திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லூர் மூன்றாவது மண்ட லம் பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அள்ளுவதற்காக, தனியார் ஒப்பந்த நிர்வாகம் சார்பில் ரூ.1  கோடியை 20 லட்சம் மதிப்பீட்டில் 3 லாரிகள் மற்றும் ரூ.18 லட் சம் மதிப்பீட்டில் 10 பேட்டரி வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக வாங்கப்பட்டது. அதனை  சனி யன்று திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர்  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தனர்.

கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்  போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

திருப்பூர், டிச.16- திருப்பூர் மாவட்ட அளவிலான கட்டுரை,  கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளி, கல் லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு  இடையே பேச்சாற்றலையும், படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கத்தில் ஆண்டுதோ றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட  அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின் றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட் டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாண வர்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும்  பேச்சுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் ஜனவரி 10 ஆம் தேதி காலை 10  மணிக்கும் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல் லூரி முதல்வர் அல்லது துறைத் தலைவ ரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பாக தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ் வொருப் போட்டிக்கு தலா ஒருவா் வீதம்  மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.  போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி  தொடங்குவதற்கு முன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும்  முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாண வர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5  ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப்படும். எனவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் மூலம்  ரூ.5 கோடி மோசடி: 4 பேர் கைது

திருப்பூர், டிச.16 கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த தயானந்த் மற்றும் கோவை, திருப்பூரைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் கோவை  மாநகர குற்றப் பிரிவு போலீஸில் அளித்த புகார் மனுவில் கூறி யிருப்பதாவது, கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த பாக் கியலட்சுமி (60), அவரது மகள் நாகரத்தினம் (35), மகன் மணி கண்டன் (27) ஆகியோர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆன் லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 201 8 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த இந்த வர்த்தக நிறுவ னத்தில் கோவை, திருப்பூரைச் சேர்ந்த பலர் பணத்தை முத லீடு செய்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்க ளுக்கு மாதந்தோறும் 8% வட்டி தரப்படும் என்ற அறிவிப்பு  வெளியிடப்பட்டது. இதனை நம்பி பலர் பல லட்சம் ரூபாய் முத லீடு செய்திருந்தோம். அந்த நிறுவனமும் அறிவித்தபடி, எங்க ளுக்கு 8% வட்டியை தந்து கொண்டிருந்தது. கடந்த நவம்பர்  மாதம் 8 % வட்டிக்குப் பதிலாக 6 % மட்டுமே வழங்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் வட்டித் தொகை வர வில்லை. இது குறித்து நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள்  முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, எங்களது  அசல் பணத்தை திருப்பி தரும்படி கேட்டோம். ஆனால், எங்க ளது முதலீட்டுத் தொகை ரூ.5 கோடியை திருப்பி தராமல்  மோசடி செய்துவிட்டனர். இது குறித்து உரிய விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

மொத்த ஏற்றுமதியில் திருப்பூருக்கு பெரும் பங்கு உண்டு

திருப்பூர், டிச.16-  மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.22  சதவீதம், ஏற்றுமதியில் 8.4 சதவீத மாக உள்ளதில் பெரும் பங்கு திருப் பூர் மாவட்டம் பிடித்துள்ளது என  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரி வித்தார். திருப்பூர் மாவட்டம், குறு, சிறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் துறை சார்பில், மாவட்ட அளவி லான முதலீட்டாளர்களுடனான கள நிகழ்வு கூட்டத்தினை துவக்கி வைத்து, தொழில் கடனுதவிகள் மற் றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் சனியன்று வழங்கி னார். இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது, நாட்டி லேயே எம்.எஸ்.எம்.இ எண்ணிக்கை யில் தமிழ்நாடு 2 ஆம் இடமும், இந்தி யாவில் இரண்டாவது பொருளாதார  மாநிலமாகவும், எளிதாக வணிகம் செய்யும் தரவரிசையில் 14 இடத்தி லிருந்து 3 இடத்திற்கு முன்னேறி உள் ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.22  சதவீதம், ஏற்றுமதியில் 8.4 சதவீத மாக உள்ளதில் அதில் பெரும் பங்கு  நமது திருப்பூர் மாவட்டம் பிடித்துள் ளது.  தமிழ் அரசின் இலக்கு 2030 ஆம்  ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை எட்டும் என்ற வகையில் தமிழ்நாடு அரசு செயல் பட்டு வருகிறது. 2022 - 2023 ல் பின்ன லாடை ஏற்றுமதியில் அகில இந்தியா  அளவில் மதிப்பு ரூ.61,764 கோடி  அதில் திருப்பூர் மாவட்டம் ரூ.34,358 கோடி இது 55.6 சதவீதமாக உள்ளது.  ஜவுளித்துறை இரு பிரிவுகளாக பிரிக் கப்பட்டு தனியாக இயக்குநர் நியமி னம் செய்யப்பட்டதில் திருப்பூர் மாவட்டத்திற்கென தனிகிளை அலு வலகம் உள்ளது. டவுன் ஆப் எக்ஸ் போரட் எக்சலன்ஸ் திட்டத்தில் திருப் பூர் மாவட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ. 6,551 கோடி நிர்ணயிக்கப்பட்டு இது வரை ரூ.6.603.24 கோடிக்கான 439  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரி மாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 20,612 வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது  என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், தலைவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் தென்பிராந்திய பொறுப்பாளர் (ஆயத்த ஆடை ஏற் றுமதி கழகம்) எ.சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.