districts

img

காரியமங்கலம் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

தருமபுரி, ஜன.8- காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சி யர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா தடுப் பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரங்கள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அங்கு வழங்கப்படும் மருத் துவ சேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் விரிவாக கேட்ட றிந்தார். அதனைத் தொடர்ந்து பெரியாம்பட்டி சுகாதார பூங்காவினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுத்தமாகவும், சுகாதார மாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பெரியாம்பட்டி, இண்ட மங்கலம், கோவிலூர், பைசு அள்ளி ஆகிய இடங்களில் நடை பெற்று வரும் சாலை அமைத்தல், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, கிருஷ்ணன் உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர்.