districts

img

உடுமலையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருப்பூர், டிச.2- திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் வங்கி யாளர்கள் கூட்டம் மற்றும் நகர, ஒன்றிய வளர்ச்சித் திட்டப்ப ணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில். வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்தும், துறைகள் மூலம் மேற்கொள்ளப் படும் அரசு திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மேலும், கல்வி கடன், தொழில் கடன், கூட்டுறவுக் கடன்,  சுய உதவி குழுக்கடன்  உள்ளிட்டவை குறித்து வங்கியாளர்க ளுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் மாவட்ட தொழில் மையம்,  வேளாண்மை - உழவர் நலத் துறை, கால்நடை  பராமரிப்பு  துறை, ஆவின், தாட்கோ,  ஊராட்சி மற்றும் நகர ஒன்றிய பணி கள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு  கடன்களுக்காக வரும் பொதுமக்களுக்கு தாமாதமின்றி வங்கி கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்று வரும்  திட்டப்பணிகளை விரைந்து முடிந்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது. இக்கூட்டத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  கு.சண்முகசுந்தரம், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா, எஸ். விஜயன், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் அ.லட்சுமணன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட் சியர் ஜஸ்வந்த் கண்ணன்,  திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  வரலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் ரவி, மாவட்ட மேலா ளர் (மாவட்ட தொழில் மையம்) ராமலிங்கம் மற்றும் துறை  சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.