districts

img

திறந்த வெளியில் கல்வி கற்பிக்கப்படும் மாணவர்கள்

திருப்பூர், அக்.8- கட்டட வசதி இல்லாமல் மாண வர்கள் திறந்த வெளியில் கல்வி கற்பிக் கப்படும் நிலை உள்ளதால் புதிதாக கட்ட டம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் வலியுறுத்தல். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு நடுநி லைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 6 முதல் 10ஆம் வகுப்பு வரை மொத்தம் மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள் ளதால் இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால் போதிய இடம் இல்லாமல், தற் காலிகமாக அமைக்கப்பட்ட இரும்பு  தகர ஷீட் கூரையின் கீழ் மாணவர்க ளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.  இது குறித்து பொதுமக்கள் கூறி யதாவது: காளிநாதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஒரே  வளாகத்தில் அமைந்துள்லது. போதிய  கட்டட வசதி இல்லாததால் மாணவர்கள்  திறந்த வெளியில் அமர வைக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் இடப்பற்றாக்குறையால் மாண வர்களும், ஆசிரியர்களும் தவிர்த்து வருகின்றனர். பள்ளிக்கு மாற்று இடத் தில் கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போதிய இடம் இல்லாமல் அருகிலுள்ள  ஊராட்சிக்கு சொந்தமான கட்டடமும்  தற்காலிகமாக கல்வி கற்க பயன்படுத் தப்பட்டு வருகிறது. வகுப்பறை பற் றாக்குறையை கருத்தில் கொண்டு ஏற்க னவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதி தாக கட்டடம் கட்ட விரைவாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.