திருப்பூர், டிச.15- பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்துள் ளனர். திருப்பூர் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பிச்சம்பாளையம், போயம்பாளையம், பெருமாநல்லூர் வழியாக கணக்கப்பாளையம் வரை செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகை யில், நாங்கள் பெருமாநல்லூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறோம்.இந்தப் பள்ளியில் கணக்கம்பாளையம் பிரிவு, குருவாயூரப்பன் நகர், போயம்பாளை யம், பெருமாநல்லூர், குன்னத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறோம். தினமும் காலை 8.10 மணிக்கு 54 ஆம் எண் பேருந்தும், 9.05 மணிக்கு 43 ஆம் எண் பேருந்தும் இயங்கி வருகிறது.இந்த இரு பேருந்து களை விட்டால் பள்ளிக்கு செல்ல வேறு வழி இல்லை. நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் கண் டிக்கின்றனர். எனவே பள்ளி நேரங்க ளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரி வித்தனர்.