நாமக்கல், ஏப்.13- ராசிபுரம் திருவள்ளூர் அரசு கலைக் கல் லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக் கணிப்பு மற்றும் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்ட களூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் 3500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால், இக்கல்லூரியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் குடிநீர் தேவைக்காக கல்லூரிக்கு வெளியில் உள்ள சிற்றுண்டி கடைகளை பயன்படுத்த வேண்டி உள்ளது. இதேபோல், கழிவறை கள் சுகாதாரமின்றி காணப்படுவதால் மாண வர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதேபோல், போதுமான வகுப்பறை கள், மின் விளக்கு, மின் விசிறிகள் இல்லாத தால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதி களை ஏற்படுத்திடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் புத னன்று உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், ராசிபுரம் காவல் ஆய்வா ளர் சுகவாணன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் மாணவர்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் மாணவர்களின் நியாயமான கோரிக் கையை விரைந்து நிறைவேற்றுவதாக உறு தியளித்தார். இதன்பின் கல்லூரி முதல்வர் மணிமேகலையிடமும் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு மாணவர்கள் போராட் டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பி னர் முன்னதாக, இப்போராட்டத்திற்கு இந் திய மாணவர் சங்கத்தின் ராசிபுரம் ஒன்றிய தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி கிளை நிர்வாகிகள் இக்பால், அருண், புகழ், மெய் யரசன், புரட்சிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தேன்மொழி, மாவட்ட செயலா ளர் தே.சரவணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர்.