districts

img

தரங்கம்பாடி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

தரங்கம்பாடி ஜூலை 24- புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், இலவச மடிக்கணினி வழங்கிட வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாவட்ட துணை தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஷ்ணு, செல்வகுமார், நிர்வாகிகள் வினிதா, ஆதி, இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

;