districts

img

அடிப்படை வசதிகள் கேட்டதற்கு தண்டனையா? தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவிகள் போராட்டம்

சேலம், அக்.6- அடிப்படை வசதிகள் இல்லாதததை சுட் டிக்காட்டிய மாணவிகளை முட்டி போட்டு  தண்டனை வழங்கிய தலைமை ஆசிரியரை கண்டித்து சேலம் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது.  சேலம் பழைய பேருந்து நிலையம் அரு கில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இரண்டாயிரத்திற்கும் அதிக மான மாணவிகள் கல்வி பயின்று வரும் இந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளியில் மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் கழிப் பறை வசதிகள் விளையாட்டு மைதானங்கள்  உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராத அதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தெரிவித்தனர். மேலும்,  இப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ் வாணி சக ஆசிரியர் ஆசிரியர்களையும் மாண விகளையும் தரை குறைவாக நடத்துவதாக வும் பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளை யும் மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு தெரி வித்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக் கள் இருந்துள்ளது. இதனைப் பார்த்த மாண விகள் அந்த குடிநீரை பயன்படுத்த முடியாது என தலைமை ஆசிரியையிடம் புகார் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து புகார் தெரி வித்த மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியை அறையிலேயே முட்டி போட வைத்து அவமா னப்படுத்தியுள்ளார்.   பள்ளிக்கும் பள்ளி மாணவிகளுக்கும் பய னில்லாத தலைமை ஆசிரியை தமிழ் வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வும், வேறு தலைமை ஆசிரியை இப்பள் ளிக்கு தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்து வகுப்புகளை புறக் கணித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே,  மாணவியை முட்டி போட வைத்த தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளியில் குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர  வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின்  சேலம் மாவட்டக்குழு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பள்ளி கல்வி அலுவலரை வலியுறுத்தியுள்ளது.