கோவை, மே 30- கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பய ணிக்கும் வாகனங்கள் ஆட்சியர் தலைமை யில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2023-24 கல்வி ஆண்டு ஜூன் முதல் வாரத் தில் துவங்க உள்ளது. இதனையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாக னங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றன. இச்சோதனைகளில் வாகனங்களின் தரம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வசதி கள் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, உடல் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படு கிறது. இதன் தொடர்ச்சியாக கோவை மாவட் டத்தில் பிஆர்எஸ் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1355 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய் யப்பட்டது. வாகனங்களின் தரம், முதலுதவி பெட்டிகள் உள்ளதா, அவசர கால வழி உள் ளதா? கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது. மேலும், ஓட்டுநர்களுக்கு கண்பரி சோதனை, உடல் பரிசோதனையும் தனியார் மருத்துவமனையின் சார்பில் மேற்கொள்ளப் பட்டன. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறை யின் சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி கள் வழங்கப்பட்டது. இந்த சோதனையின் போது, கோவை மாநகர காவல் ஆணையா ளர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். உதகை இதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் ஆகிய வட்டார போக்கு வரத்து கழக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 363 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஊட்டியில் மட்டும் 150 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், அம்ரித் தலைமையில் நடைபெற்ற ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாக ராஜன், வாகன ஆய்வாளர் விஜயா, போக்கு வரத்து அலுவலர் துரைசாமி, வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.