சேலம், அக்.28- “எங்களுக்கு இந்தி மொழி வேண்டாம்” என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாணவ, மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர். மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு தலைவர் நீதியரசர் தா.முருகேசன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கருத்து கள் கேட்கப்பட்டது. அதில், தமிழ கத்தில் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக தமிழ் மொழியை கற்றுத்தர வேண்டும் எனவும், இந்தி மொழி தங்களுக்கு தேவை யில்லை எனவும் எண்ணற்ற மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், அரசு பள்ளிகளில் அடிப் படை வசதிகள் அமைத்து தர வேண்டும். முறையாக கழிப்பறை கள் பராமரிக்கப்பட வேண்டும்.
அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர். உடற்கல்வி வகுப்பை போல் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாரம் இரண்டு பாட வேலைகளையாவது வேளாண் மைக்கு ஒதுக்கி வேளாண்மையை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு மிதிவண்டி வழங்கு வதைப் போல் ஆறாம் வகுப்பு முதல் மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டி வழங்க வேண்டும் இதனால் மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் சரியாகும் என மாணவ, மாணவிகள் யோசனை தெரிவித்தனர். இதே போல் ஆசிரியர்கள் மற்றும் கல்வி யாளர்கள், பெற்றோர்கள் எண் ணற்ற கருத்துக்களை உயர்மட்ட குழுவினரிடம் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் உயர்மட்ட குழு உறுப்பினர் முனைவர் எஸ்.ஜவகர் நேசன், முனைவர் அருணா ரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. மேனகா, முதன்மை கல்வி அலுவலர் முனைவர் ரா.முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.