districts

img

அரசுப்பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை, செப்.11- க.க.சாவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப் பறைகள் வேண்டியும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கேட்டு மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வரு டங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது வரை கூடு தல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை. கழிவறை வசதி கள் கூட முறையாக இல்லை. கழிவறை கட்டித் தர வலியு றுத்தி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழி கல்வி என இரண்டு வகுப்பு மாணவர் களையும் ஒரே வகுப்பறையில் அமர வைத்து வகுப்புகள் எடுக் கப்படுகிறது. மாணவர்கள் பள்ளியின் வெளியில் உள்ள  பொதுக் கழிவறையையே உபயோகப்படுத்துகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கென தனி கழிப்பறை இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை. மேலும், இங் குள்ள வகுப்பறைகளும் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், மாணவர்களை பெரும்பாலும் வெளி யில் அமர வைத்தே பாடங்கள் நடத்தப்படுகிறது. மழைக் காலங்களில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெற்றோர் கள் தெரிவித்தனர்.