திருப்பூர், மார்ச் 7- பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி இந்திய மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கல்லூரி வேலை நேரங்க ளில் கூடுதலாக பேருந்துகளை இயக்கிட வேண்டும். கல்லூரியில் பணிபுரியும் சிறப்பு விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய் திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல் லூரி கிளை மாநாடு கிளைத் தலைவர் உதயராஜ் தலை மையில் நடைபெற்றது. சங் கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி வர வேற்று பேசினார். மாவட்டத் தலைவர் கல்கி ராஜ் துவக்கி வைத்து பேசினார். மாநிலத் தலைவர் தெள.சம்சீர் அகமது சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார் உட்பட பலர் பங் கேற்றனர். இதில், புதிய தலைவராக விமல்ராஜ், செயலாளராக கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக 200க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளா கத்திலிருந்து மாணவர் சங்க மாவட்ட அலு வலகம் வரை பேரணியாக சென்றனர்.