districts

img

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர மாணவர் சங்கம் வலியுறுத்தல்

அவிநாசி, ஜூலை 17- அவிநாசி அருகே கருவலூர் உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய மாணவர் சங் கத்தினர் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட முற்பட்டனர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட திருப் பூர் செல்லும் சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந் துள்ளது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்  நியமிக்க வேண்டும், மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கள் மற்றும் கழிப்பறைகள் கட்டி தர வேண்டும், உடல் ரீதியாக  மாணவர்களை கேலி செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கருவலூர் அரசு உயர் நிலைப் பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர்‌.   இதனை அறிந்த காவல்துறையினர் மாணவர் சங்க  நிர்வாகிகளிடம், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தங்கள் கோரிக்கை மனுவை வழங்குமாறு கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மாணவர் சங்க மாவட்டத் தலை வர் பிரவீன், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய  குழு நிர்வாகி உதயகுமார் ஆகியோர் காவல்துறையினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டம் நடத்த வந்த  மாணவகளை மிரட்டும் தோணியில்   ஆசிரியர்கள் செயல்பட்டதாக அங்கு இருந்த சிலர் தெரிவித் தனர்.