சேலம், ஏப்.24- பட்டம் பெற வந்த மாண வர் சங்க தலைவரை, ஆளு நரின் பாதுகாப்பு நடவ டிக்கை என்கிற பெயரால் கைது செய்யப்பட்ட நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து சேலத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில், திங்க ளன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந் நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவராக உள்ள அரவிந்தசாமி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக சென்றுள்ளார். அங்கு, அரவிந் தசாமியை தடுத்து நிறுத்தி, காவல்துறை கைது செய்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந் தசாமியை எந்தவொரு காரணமுமின்றி அடா வடித்தனமாக தஞ்சை மாவட்ட காவல் துறை கைது செய்துள்ளது. தஞ்சை பல்கலை கழகத்தில் பட்டம் பெறுவதற்காக அமர்ந்தி ருந்த போது ஆளுநர் குறித்து விமர்ச னம் செய்து விடுவார் என முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்ப ட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண் டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், திரளான மாணவர்கள் பங் கேற்றனர்.