districts

நீட் கோச்சிங் சென்டரில் மாணவன் தற்கொலை முயற்சி

கோவை, டிச.22- கோவை அருகே நீட் கோச்சிங் சென் டரில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. ஈரோடு மாவட்டம், பவானி பகுதி யைச் சேர்ந்த மாதேஸ்வரன் மகன் ஸ்ரீ  ஆகாஷ். கடந்த 2021 ஆம் ஆண்டு பன்னி ரண்டாம் வகுப்பு முடித்த இவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இதில் தேர்ச்சியடையாத நிலையில், மூன்றா வது முறையாக கோவை நீலாம்பூர் பகு தியில் உள்ள கதிர் கல்லூரி வளாகத்தி னுள் இயங்கும், சைதன்யா நீட் கோச் சிங் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று  வருகிறார். இந்நிலையில், வியாழனன்று மாலை கல்லூரி விடுதியில் யாரும் இல் லாத நேரம் பார்த்து ஆகாஷ் தனக்குக் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்  கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக  தெரிகிறது. அப்போது ஆகாஷின் அல றல் சத்தம் கேட்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். உடலில் தீக்காயங் களுடன் ஆகாஷை மீட்ட கல்லூரி நிர்வா கத்தினர், சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 80% காயங்க ளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தி னர் கூறுகையில், கோச்சிங் சென்டரில் நடத்தப்படும் பயிற்சி தேர்வில் மாண வன் ஆகாஷ் குறைவான மதிப்பெண் கள் பெற்றுள்ளார். ஆனால், தான் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக பெற்றோரி டம் மதிப்பெண்களை மாற்றி கூறியதாக தெரிகிறது. இதனை அறிந்த ஆசிரியர் கள், கோச்சிங் சென்டருக்கு பெற்றோரை அழைத்து வர வேண்டும் என கூறியுள் ளனர். பெற்றோருக்கு பயந்து ஆகாஷ் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கக் கூடும் என தெரிவித்தனர்.