கோவை, ஜூன் 14- மயங்கி விழுந்த பள்ளி மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் உயிரிழந்தார். மருத்துவர் களின் அலட்சியத்தால் மாணவி உயிரிழந்துள்ளதாக குற்றஞ்சாட்டி, தனியார் மருத்துவமனையை முற் றுகையிட்டு உறவினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. கோவை மாவட்டம், மதுக் கரை அருகே உள்ள சர்ச் காலனி யைச் சேர்ந்த பார்த்திபன் - சகா யராணி தம்பதிக்கு சௌமியா (13), என்ற மகள் உள்ளார். இவர், குனிய முத்தூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்க ளன்று முதல் நாள் பள்ளி திறந்த போது உற்சாகமாக சென்றுள் ளார். பள்ளி சென்ற சிறிது நேரத்திற் குள் சௌமியாவின் பெற்றோ ருக்கு பள்ளியில் இருந்து தொலை பேசியில் அழைப்பு வந்துள்ளது. இதில் பள்ளியில் சௌமியா மயங்கி விழுந்ததாகவும், பள்ளி அருகே உள்ள சங்கீதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளனர். இதற்கி டையே சிகிச்சை பெற்று வந்த சௌமியாவிற்கு இதயத்துடிப்பு படிப்படியாக குறையத் துவங்கி யதாக தெரிகிறது. இதனால், அடுத் தக்கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுமி உயிரிழந் தாக மருத்துவர்கள் தெரிவித்த னர். இதனால் ஆவேசமடைந்த சௌமியாவின் பெற்றோர், உற வினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சிறுமியின் பெற் றோர், உறவினர்கள் கூறுகையில், எனது மகளை இந்த மருத்துவம னைக்கு அழைத்து செல்வதை முதலில் ஆசிரியர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து அழைத்து தனியார் மருத் துவமனையில் சேர்த்ததாக கூறி னார்கள். குழந்தைக்கு பிரச்சனை என்றால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவம னைக்கு அனுப்பிருந்தால் எனது மகளை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவசர சிகிச்சை பிரிவு கூட இல்லாத இந்த மருத்துவம னையில் சுயநினைவு இல்லாத குழந்தையை 5 மணி நேரம் வைத் துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியத்தால் தான் எங்களது குழந்தை உயிரி ழந்தது என கதறி அழுதனர். இதை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்துர் காவல் துறையினர் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய் தனர். இதனையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவம னைக்கு போலீசார் அனுப்பி வைத் தனர். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தனியார் மருத்துவ மனை மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமியின் உயிரிழப்பிற் கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரி யவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கீதா மருத்து வமனை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத் துவமனை என்பது குறிப்பிடத் தக்கது.