சேலம், பிப்.29- ஏழாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி, தான் இயக்கிய திரைப்படத்தை, தமிழக முதல்வ ரும், பள்ளி கல்வித்துறை அமைச்ச ரும் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சேலம் மாநகர், பொன்னம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிர சாத். திரைப்பட உதவி இயக்குன ராக பணிபுரிந்து வரும் இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். அதில், முதல் மகளான பிரஹிமா(11), பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையுடன் இணைந்து திரைப்படம் எடுக்கும் இடத்திற்கு சென்ற பிரஹிமாவுக்கு, திரைப்படம் இயக்க ஆசை வந்துள் ளது. இதனை தந்தையிடம் கூறிய போது, அவர் சினிமா குறித்தும், படத்தை இயக்குவது குறித்தும் கற் றுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், தனது பத்து வய தில் பள்ளியில் நடந்த உண்மை நிகழ்வை படமாக்க வேண்டும் என தந்தையிடம் பிரஹிமா கூறியுள்ளார். மகளின் கதையைக் கேட்ட பிரசாத் கதைக்களம் நன்றாக இருப்பதால், தானே முன்வந்து படத்தை தயாரிப்ப தாக மகளிடம் வாக்குறுதி அளித்துள் ளார். அதன்படி, பிரஹிமா “கமலியின் எதிர்காலம்” என்ற தலைப்பில் முழு நீள படத்தை இயக்கி அதில் நடித்துள் ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப் படுவதையும், அவரை மீண்டும் பள் ளியில் படிக்க வைப்பதற்காக சக நண் பர்கள் முயற்சி செய்வதையும் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரஹிமா கூறியுள்ளார். மேலும், இந்த தருணத்தில் நான் படம் எடுக்க உதவிய என் தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட அனைவ ருக்கும் எனது நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன். எனது படத்தை புதுச்சேரி மாநில முதல்வர் ரங்க சாமி பார்த்து வாழ்த்து மடல் அனுப்பி யுள்ளார். அதேபோன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள் ளிக்கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி ஆகி யோரும், தனது திரைப்படத்தை பார்க்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களும் பார்க்க வேண்டும் என பிரஹிமா கோரிக்கை வைத்துள் ளார்.