districts

img

தவறு செய்பவர்களை விட்டுவிட்டு தட்டிக்கேட்டவருக்கு தண்டனையா?

கோவை, டிச.26- பள்ளியில் நடந்த தவறை சுட்டிக் காட்டி, தட்டிக்கேட்ட ஆசிரியரை பலி வாங்கும் மாவட்ட கல்வித்துறையின் நடவடிக்கையை கண்டித்து, கோவையில் மாணவர், மாதர், வாலி பர், தீஒமு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஆலாந் துறை பகுதியில் செயல்பட்டு வரும்  அரசு மேல்நிலை பள்ளியில் ராஜ்கு மார் என்பவர் ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அப்பள்ளியில் தேசிய  கீதம் பாதியில் நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் திருந்தார். இதனைத்தொடர்ந்து, அப் பள்ளியில் பயிலும் மாணவிகள் உடற் பயிற்சி ஆசிரியரால் பாலியல் துன்பு றுத்தலுக்கு உள்ளாகி வருவதாக, அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற் றும் சக ஆசிரியர்களிடம் தெரிவித் தார். ஆனால், அச்சம்பவம் அப் படியே மூடி மறைக்கப்பட்டது. பின் னர், இச்சம்பவம் தொடர்பாக உரிய  அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினரிடம் தெரிவித்த பின்பு, இந்த  குற்றச்சாட்டு நிருபனமாகி அப்பள்ளி யின் உடற்கல்வி ஆசிரியர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டார். தவறை சரி செய்ய வேண்டிய ஆசிரியர்கள் சிலர், மாணவர்களை தூண்டிவிட்டு போக்சோ சட்டத்தில்  கைதான ஆசிரியருக்கு ஆதரவாக  மறியல் உள்ளிட்ட போராட்டங்களில்  ஈடுபட்டனர். இது காவல்துறை வட்டா ரத்தையே அதிர்ச்சியை உருவாக் கியுது.

இந்நிலையில், ஓவிய ஆசிரி யர் ராஜ்குமாரை திடீரென சஸ் பெண்ட் செய்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமு ரளி உத்தரவிட்டார். தவறு செய்த வர்களை விட்டுவிட்டு தவறை சுட்டிக் காட்டிய ஆசிரியர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது பல் வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.  இதன்தொடர்ச்சியாக, கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஒன்றி ணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, தமிழக அரசும்,  மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல் வித்துறையும்  “ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் இடை நீக்கத்தை உடனடி யாக திரும்ப பெற வேண்டும். ஆலாந் துறை அரசு பள்ளியில் நடைபெறும்  சாதியப்போக்கு ஊழல் போன்ற  செயல்களில் ஈடுபடும் ஆசிரியர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். மாணவி மீதான வன்மு றையை மறைத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவ ஞானம், மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் விவே கானந்தன், பொருளாளர் தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அசாருதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.