சேலம், நவ.11- எல்ஐசி முகவர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழையில் சேலம் கோட்டை மைதா னத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு எல்ஐசி நிறுவனத்தை தனி யார் மயப்படுத்தக்கூடாது. பாலிசிதாரர் களின் போனசை உயர்த்த வேண்டும். அனைத்து விதமான விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை ரசீது தர வேண்டும். முகவர்க ளுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஐஆர்டிஏஐ நிர்வாகம் அறிமுகப் படுத்தும் “பீமா சுகம்” என்ற ஆன்லைன் தளத் தினால் 66 ஆண்டுகளாக எல்ஐசி முகவர் களுக்கு எல்ஐசி வழங்கி வந்த சலுகைகள் பறிக்கப்படுவதை திரும்பப்பெற வேண்டும். எல்ஐசி நிர்வாகம் முகவர்களுக்கு வழங்கி வரும் கமிசனை, ஐஆர்டிஏஐ குறைப்பதை கண்டித்தும், பாலிசியின் முகவர்களை மாற் றம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பழைய பாலிசிகளுக்கு கட்டாய ஆன்லைன் பதிவிலி ருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஒன்றிய அரசு தலையிட்டு 13.50 லட்சம் முக வர்களையும், 37 கோடி பாலிசிதாரர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எல்ஐசி முகவர் சங்கங்க ளின் கூட்டுக்குழு சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் சங்கத்தின் தலைவர் எம்.பி. இளையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். இதில் இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் தென்மண்டல துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம், இணைச்செய லாளர் ஏ.கலியபெருமாள், எல்ஏஎப்ஐ தென் மண்டல முன்னாள் தலைவர் சி.பாலகிருஷ் ணன், சேலம் கோட்ட முன்னாள் பொதுச்செய லாளர் சி.உமாபதி, பொதுச்செயலாளர் டி. அமுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் கொட்டும் மழையில் குடைபிடித்து எல்ஐசி முகவர்கள் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக் கங்களை எழுப்பினர்.