districts

img

என்னை கேள்வி கேட்க நீங்கள் என்ன அமைச்சரா ? மருத்துவமனைக்கு வராத சித்த மருத்துவரை கண்டித்து போராட்டம்

உடுமலை, ஜூன் 21- குடிமங்கலம் ஒன்றியம், இராம சந்திரபுரத்தில் உள்ள சித்தமருத்து மனைக்கு மருத்துவர் சரியாக  வருவது இல்லை. இதுகுறித்து சித்த மருத்துவரிடம் தொலைப்பேசியில் கேட்ட போது, என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்? நீங்கள் என்ன  அமைச்சரா? உங்களுக்கு நான் பதில்  சொல்ல முடியாது என கூறியதைய டுத்து தமிழ்நாடு விவசாய சங்கத் தின் தலைமையில் பொதுமக்கள் சித்த மருத்துவமனையை முற்று கையிட்டு செவ்வாயன்று போராட் டத்தில் ஈடுபட்டனர். உடுமலை தாலுகா, குடிமங்க லம் ஒன்றியத்தில் இராமசந்திரா புரம் பகுதியில் அரசு ஆரம்பச் சுகா தார நிலைய வளாகத்தில் சித்த மருத் துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார்  நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட  அணிக்கடவு, இராமசந்திரபுரம், காரியாச்சாளை, நஞ்சேகவுண்டன் புதூர், வீதம்பட்டி, வேலூர், சலவநா யக்கன்பட்டி, வாகத்தொழுவு, சிந்தி லூப்பு, மரிகந்தை, வி. வல்லகுண் டாபுரம், விருகல்பட்டி, சி. நாகூர்,  அம்மாபட்டி மற்றும் மூலனூர் போன்ற கிராமங்களில் பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மருத்துவம்  பார்க்க வரும் போது தொடர்ச்சி யாகப் பல மாதங்கள் சித்தமருத் துவ பிரிவுக்கு மருத்துவர்கள் வரு வது இல்லை. மேலும் ஒரு உதவி யாளர் மட்டும் பெயருக்கு இருந்து  வருகிறார்

என்றும், இதுகுறித்து பல  முறை தலைமை மருத்துவருக்குப் புகார் தெரிவித்தும் தற்பொழுது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கா ததைக் கண்டித்தும், மருத்துவமனை யில் தினமும் மருத்துவர்கள் வரு கையை உறுதிப்படுத்த கோரி தமிழ் நாடு விவசாய சங்கத்தின் குடிமங் கலம் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் மற்றும் சக்திவேல், சந்திரசேகரன், தர்மசாமி, செந்தில்குமார் உள் ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி னார்கள்.  இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகா ரில் குடிமங்கலம் ஒன்றியம் இராமச ந்திரபுரத்தில் உள்ள சித்தமருத்த மணைக்கு மருத்துவர் சரியாக  வருவது இல்லை. மருத்துவமனை யில் இருந்த உதவியாளரிடம் கேட்ட  போது சரியான பதில் இல்லாமல் போனதால் சித்தமருத்துவருக்கு தொலைபேசில் கேட்ட போது என்னை கேள்ளி கேட்க நீங்கள் யார்  நீங்கள் என்ன அமைச்சரா உங்க ளுக்கு நான் பதில் சொல்ல முடியாது  என்று மருத்துவர் சொன்னதால் தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின்  தலைமையில்  பொதுமக்கள் இணைத்து போராட்டம் நடத்தி னோம். மேலும்,  மாவட்ட ஆட்சியர் இப்பகுதி மருத்துவமனையை ஆய்வு செய்து அனைத்து மருத்து வமனை ஊழியர்களின் வருகை பதி வேட்டை ஆய்வு செய்து தரமான மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் தெரி வித்ததாகக் கூறினர்.