districts

img

கூடுதல் கட்டணம் கேட்டு சித்தரவதை

சேலம், பிப்.25- நாமக்கல் அருகே கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை சித்தரவதை செய்த  தனியார் பள்ளியை இந்திய மாணவர் சங் கத்தின் தலைமையில் மாணவர்கள் முற் றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டாய  கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப் பட்ட மாணவர்களிடம் கட்டணம் கேட்டு மிரட்டி வந்தாகவும் கூறப்படுகிறது. மேலும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைப்பதும், பிற மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தக்கூடிய வகையில் ஆபா சமாக திட்டுவதும் என பள்ளி நிர்வாகத்தி னர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஒரு மாணவின் பெற் றோர் கல்வி கட்டணம் செலுத்த பள்ளிக்கு  வந்தபோது, அங்கு தனது மகள் வெயிலில் நிற்க வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, தனது செல்போனில் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனால், பள்ளி நிர்வாகத்திற்கும், பாதிக்கப்பட்ட மாணவி யின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற் பட்டது. இதனையறிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண் ணன், மாவட்ட தலைவர் சரவணன், சிபிஎம் நாமகிரிபேட்டை ஒன்றிய செயலாளர் சின்ன சாமி உள்ளிட்டோர் பள்ளியை முற்றுகை யிட்டனர். மேலும், அப்பள்ளி மாணவர் களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் பள்ளி தாளாளர் தவமணி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், இனி பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை வெளியே நிற்க  வைக்க மாட்டோம் என உறுதியளித்தனர். இருப்பினும் கட்டாய கட்டண வசூல் தொடர் பாக எவ்வித உறுதிமொழியும் அளிக்க வில்லை. ஆகவே, இது சம்மந்தமாக தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள் ளிட்ட சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் புகார் கடி தம் அனுப்பி, அதன்பின்னர் அடுத்தகட்ட இயக்கத்தை முன்னேடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.