districts

img

ஜம்புக்கல் மலைப்பகுதியில் காவல்துறையின் தடை உத்தரவு

உடுமலை, ஜன. 5- ஜம்புக்கல் மலைப்பகுதியில் காவல்து றையின் தடைஉத்தரவு பிறப்பித்திருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இது பாதிக்கபட்ட விவசா யிகளுக்கு எதிராக உள்ளதாக விவசாயிகள் எதிர் ப்பு தெரிவித்துள்ளனர்.  உடுமலை ஆண்டியகவுண்டணூர் கிரா மத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான மலைப் பகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டு பல நிபந்த னைகளுடன் ஏழை விவசாயிகளுக்கு தமிழக அர சால் நிலம் வழங்கபட்டது. இந்நிலையில் அரசு  விவசாயிகளுக்கு வழங்கிய நிலத்தை தனிநபர்கள்  போலி ஆவணங்களை வைத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்து வருவாய்த்துறை ஆவ ணங்களை மாற்றி உள்ளதாக புகாரின் பெயரில் கடந்த நவம்பர் மாதம் கோட்டாச்சியர் விசாரணை செய்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக  போராட்டம் நடைபெற்று வந்து உள்ளது.  பாதிக்கபட்ட விவசாயிகள் மலைப்பகுதிக்கு வரமுடியாத வகையில் ஆக்கிரப்பு செய்தவர்கள் கேட் அமைத்து இருந்ததை அப்புறபடுத்த வேண் டும் என்று வருவாய்த்துறை மற்றும் காவல்து றைக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பாதிக்கபட்ட விவசாயிகள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறை, விவசாயிகள் தான் பாதையை அடைத்து உள்ளாதாகவும் இதனால் சட்ட ஒழுக்கை பாதுகாக் கும் வகையில் ஜம்புக்கல் மலை பகுதிக்கு  யாரும் வரக்கூடாது என்று  அமாரவதி காவல்துறை தடை உத்தரவு போட்டு உள்ளது. பாதிக்கபட்ட விவசா யிகளுக்கு வேதனையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண் டும் என வருவாய் கோட்டாச்சியருக்கு விசா யிகள் கோரிக்கை வைத்த நிலையில், வெள்ளி யன்று அமராவதி காவல் ஆய்வாளர், ஆண்டி யகவுண்டணூர் கிராம நிர்வாக அலுவலர், பாதிக் கபட்ட விவசாயிகள் மற்றும் ஆக்கிரப்பு செய்துள் ளதாக கூறும் நபர்கள் அனைவரும் கோட்டாச்சியர் அலுவலத்தில் நடத்த அமைதி பேச்சு வார்த்தை யில் பங்கேற்றனர்.