districts

img

மொரட்டுப்பாளையத்தில் கல்குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு

திருப்பூர், ஜூலை 8- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம்  மொரட்டுப்பாளையம் கிராமத்தில் வீடுகள் அருகிலேயே கல்குவாரி அமைப்பதற்கு சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் உள்பட பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர். கடந்த 10 ஆண்டுகளாக மணலுக்கு மாற் றாக எம்-சாண்ட் என்று வந்தபிறகு, உச்சகட்ட கனிமக்கொள்ளை நடைபெறுகிறது. குவா ரியில் விபத்து என்ற பெயரில் நடக்கும் படுகொ லைகள் பொதுவெளியில் தொடர்ந்து அம்ப லப்படுத்தப்படுகிறது. இதனால், முறைகே டாக செயல்படும் கல் குவாரிகள் மீது அரசு  நிர்வாகம் சில நடவடிக்கைகள் மேற்கொண்டு  வரும் நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஊத்துக்குளி வட்டத்தில் இருந்த கல்குவாரிகள் முறைகே டாக இயங்குகிறது என்று அனைத்து குவாரி களையும் மூடி, தவறுக்கு துணை நின்ற அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குளி வட்டம் மொரட்டுபாளையம் கிராமத் தில் புதிதாக அமைய இருக்கும் புல எண்: 96/1ஏ கோமதி கல்குவாரி அமைப்பது குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம் புதனன்று  ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இதன் அருகில்  உள்ள புலத்திற்கு (96/1பி, 2பி) உயர் நீதிமன் றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், புதிய  கல்குவாரி அமைக்க இக்கூட்டம் நடத்தப் பட்டது. இக்கூட்டத்தில் கல்குவாரியின் சட்ட விரோத செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட பல் வேறு கிராம மக்கள், சமூக மற்றும் சூழலி யல் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் நடைபெறுவது தொடர்பாக  நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரத்தில்  காலை 10 மணிக்கு என குறிப்பிடப்பட்டிருந் தது. அதே சமயம் இணையதளத்தில் காலை  11.30 மணிக்கு என நேரம் குறித்திருந்தனர்.

இருவேறு நேரங்கள் குறிக்கப்பட்ட நிலை யில் இக்கூட்டத்தில் பங்கேற்க சிலர் 11  மணியளவில் வந்தனர். ஆனால் ஏற்கெ னவே 10 மணிக்கு கூட்டம் தொடங்கி கருத்துக்  கேட்கப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறி யுள்ளனர். இதற்கு சட்டவிரோத கல் குவாரி  எதிர்ப்பு இயக்கத்தினர் ஆட்சேபம் தெரிவித்த னர். இணையதளத்தில் 11.30 மணி என  நேரம் குறிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினர். இதையடுத்து மாவட்ட ஆட் சியர் தலையிட்டு அப்போது வந்தவர்களை யும் கருத்து தெரிவிக்க அனுமதித்தார். இதில் கல் குவாரிகள் அமைப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய மதிப் பீட்டு அறிக்கையை தமிழில் தர வேண்டும் என் றும் வலியுறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பின ரும் கல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித் தனர். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இக்கூட்டம் நிறைவடைந்தது. பொது மக்கள் எதிர்ப்பை கருத்தில் கொண்டு தனியார் கல்குவாரி அமைக்க மொரட்டுப்பாளையத்தில் அனு மதி வழங்கக் கூடாது என்றும் சட்டவிரோத  கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் ந.சண்முகம் கூறினார்.