திருப்பூர், ஜூலை 18 - திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் ஸ்கேன் பரிசோதனை செய்ய அலைக்கழிப்பதாகக் கூறி கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், உறவினர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல் கின்றனர். இந்நிலையில், எம்ஆர்ஐ, அல்ட்ரா, சிடி ஸ்கேன்கள் எடுக்க கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் நாள்கணக்கில் காத்திருக்க வைத்து, அலைக்கழிப்பதாகக் கூறி கர்ப்பிணி பெண்கள், நோயாளி கள், உறவினர்கள் ஸ்கேன் எடுக்கும் மையம் முன்பாக செவ் வாயன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழந் தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு குறித்த தேதி யில் ஸ்கேன் எடுத்து தராமல் அலைக்கழிப்பதாகவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்பதால் தொலைதூரத் தில் இருந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ள வதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கையில், ஸ்கேன் எடுப்பதற்கு போதுமான அளவில் ஆட்கள் இருப்ப தாகவும், நோயாளிகளின் தன்மை பொறுத்து ஸ்கேன் எடுக் கும் நேரம் ஒரு சில சமயங்களில் மாறுபடும் என தெரி வித்தனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நோயாளிகள் குடும்பத்தார் பங்கேற்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி மாவட் டத்தில் நகர்நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா அரசு மருத்துவமனைகள் என அனைத்து பகுதி களிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்து வர்கள், ஆட்கள், உபகரணங்கள் இல்லை. அதேபோல் தொற்றா நோய்கள் எனப்படும் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்டவற்றுக்கும் மாதாந்திர மருந்து, மாத்தி ரைகள் தருவதிலும் பற்றாக்குறை உள்ளது. தங்களை அலைக்கழிக்கின்றனர் என்று நோயாளிகள் தரப்பில் தெரி வித்தனர்.