நாமக்கல், பிப்.26- எம்எஸ்எம்இ 43(எச்) என்ற சட்டத்தை ஒன்றிய அரசு உடனடி யாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட் டத்திற்கு, சிறு விசைத்தறி உரிமை யாளர்கள் சங்கத்தினர் தங்களது ஆதரவை அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம், பாவடி தெருவில் உள்ள சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத் திற்கு, சங்கத்தின் தலைவர் ஆறு முகம் தலைமை வகித்தார். செய லாளர் காயத்ரி சுப்பிரமணியம், பொருளாளர் தனசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அப்போது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்களை பாதிக்கும் வகையில் எம் எஸ் எம் இ 43(எச்) என்ற சட்டத்தை ஒன்றிய அரசாங் கம் கொண்டுவந்தது. அதாவது, 45 நாட்களுக்கு மேல் கடனாக வாங்கப்படும் விசைத்தறி உற்பத்தி துணிகளுக்கு, 30 சதவீகித வரு மான வரி கணக்கில் கொள்ளப்ப டும் என்ற விதி உள்ள சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள் ளது. இதனால் உற்பத்தியாகும் துணிகள் கொள்முதல் செய்ய முடி யாத சூழல் உருவாகியுள்ளது. அச் சட்டம், வருகிற மார்ச் 31 ஆம் தேதி அமலுக்கு வருகிற நிலையில், இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும் பப் பெற வேண்டும் என்பதை வலி யுறுத்தி, வருகிற 28 ஆம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத் திற்கு, சிறு விசைத்தறி உற்பத்தி யாளர்கள் சங்கம் முழு ஆதரவை யும் தரும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஏற்கனவே, வெண்ணந்தூர் வட்டார விசைத்தறி துணி உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தில், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களை பாதிக் கும் மத்திய அரசின் அவசர சட் டத்தை (எம்.எஸ்.எம்.இ.) கண் டித்து, வரும் 28ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது குறிப்பிடத்தக்கது.